இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையமாக திகழ்கிறது. இதன் விளைவாக, பெங்களூருவின் ரியல் எஸ்டேட் மற்றும் வாடகைச் சந்தை இந்தியாவின் பிற பெருநகரங்களை விட தனித்துவமான மற்றும் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர வாழ்க்கை முறையை நாடி வரும் மக்கள், இங்குள்ள குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துகளின் தேவையைத் தொடர்ந்து உச்சத்தில் வைத்துள்ளது. குறிப்பாக, வட பெங்களூரு போன்ற பகுதிகள், விமான நிலையத்தின் அருகாமை மற்றும் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் காரணமாக முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

இந்த சூழலில் தான், இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான டாடா ஹவுசிங் (Tata Housing), பெங்களூருவில் புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு குடியிருப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டாடா ஹவுசிங்கின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வட பெங்களூருவில் உள்ள 135 ஏக்கர் பரப்பளவிலான 'கர்னாடிகா' என்ற ஒருங்கிணைந்த குடியிருப்பு நகரத்தின் ஒரு பகுதியான 'டாடா ஹவுசிங் வர்ணம் பேஸ் I' திட்டம், ஆகஸ்ட் 2025ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை ரூ.1,000 கோடிக்கு மேல் விற்பனை தாண்டியுள்ளது.
20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த 'வர்ணம் பேஸ் I' திட்டத்தில், மொத்தம் 582 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 48 டவுன்ஹவுஸ்கள் விற்பனைக்கு இருந்தன. இதில், அடுக்குமாடிக் குடியிருப்புகள், டவுன்ஹவுஸ்கள் மற்றும் ரோ ஹவுஸ்கள் உட்பட மொத்தம் 377 யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.
இந்த வெற்றி குறித்து டாடா ரியால்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சஞ்சய் தத் கூறுகையில், "பெங்களூருவின் பிரீமியம் வீட்டு வசதிச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. எங்கள் உத்தி, இந்த மாற்றத்தை முன்கூட்டியே கணிப்பதுதான். வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை, நீண்ட கால மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு குடியிருப்பு நகரங்களை நாங்கள் உருவாக்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் SVP மற்றும் தலைமை அதிகாரி சார்த்தக் சேத் பேசுகையில், "எங்கள் அணுகுமுறை சரியான வாடிக்கையாளர்களை சென்றடைய உதவியது. கடுமையான போட்டி நிறைந்த சந்தையிலும், எங்கள் திட்டத்தின் படி இலக்குகளை அடைந்து வெற்றி பெற்றிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
டாடா ஹவுசிங் டெவலப்மெண்ட் கம்பெனி லிமிடெட் என்பது டாடா ரியால்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் மற்றும் மாலத்தீவுகளில் 0.63 மில்லியன் சதுர மீட்டருக்கும் அதிகமான வளர்ச்சித் திறனுடன் 34-க்கும் மேற்பட்ட திட்டங்களில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications