ஐடிபிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்பதற்காக கிரேட் இந்தியன் நௌடாங்கி நிறுவனத்தின் கார்ப்பரேட் உத்தரவாததாரரான கிரேட் இந்தியன் தமாஷா நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐடிபிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அடுத்த மாதம் மின்னணு மூலம் ஏலம் நடைபெறும் என்றும் இந்த ஏலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரேட் இந்தியன் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஐடிபிஐ வங்கி, ஏற்கனவே இந்நிறுவனத்தின் சொத்துக்களை கடன் வகைகளுக்காக கையகப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரேட் இந்தியன் தமாஷா
கிரேட் இந்தியன் தமாஷா நிறுவனம் ஐடிபிஐ வங்கிக்கு ரூ.86.48 கோடியும், எச்டிஎப்சி வங்கிக்கு ரூ.6.26 கோடியும், பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.49.23 கோடியும் கடனாக செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் மற்றும் வட்டி
கடந்த மே 1ஆம் தேதி கிரேட் இந்தியன் தமாஷா நிறுவனத்தின் கடன் நிலுவைத்தொகை ரூ.96.63 கோடி மற்றும் அதன் வட்டி ஆகியவை மே இரண்டாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலம்
ஏலம் விடப்படும் சொத்துக்களை ஏலம் வாங்க விரும்புவர்கள் 1.15 கோடி ரூபாய் டெபாசிட் பணம் செலுத்த வேண்டும் என்றும், மே 20ஆம் தேதி அன்று சொத்தை கையகப்படுத்தி உள்ள நிலையில் இந்த சொத்துக்களை ஜூலை 27ஆம் தேதி ஏலம் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
107.24 ஏக்கர் நிலம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள பேரூர் என்ற கிராமத்தில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 107.24 ஏக்கர் உள்ளது என்றும் இந்த சொத்துக்கள் தான் ஏலம் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி
இந்த சொத்துக்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ஜூலை 22ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications