மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (NPCI) யூபிஐ பண பரிமாற்றம் முறையில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 30% சந்தைப் பங்கு வரம்பு விதிக்கப்படும் முடிவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில், 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்த வரம்பு நடைமுறைப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது யூபிஐ பண பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனம் 30 சதவீதத்திற்கும் அதிகமாக சந்தை பங்கீட்டை வைத்திருக்க கூடாது என்ற வரம்பை கொண்டு வர மத்திய நிதியமைச்சகம் நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது.

முன்னதாக, இந்த வரம்பு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வரம்பு நடைமுறைப்படுத்துவதை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இந்த விதிமுறை கொண்டு வந்தால் UPI தளத்தை பயன்படுத்தும் மக்களின் வளர்ச்சி பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக NPCI அமைப்பு பல்வேறு பிரதிநிதிகளுடன் பலக்கட்ட விவாதங்கள் நடத்தியுள்ளது, இந்த கட்டத்தில் சந்தைப் பங்கு வரம்பை நடைமுறைப்படுத்துவது மூலம் UPI அமைப்பின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒரு நிறுவனத்திற்கு 30 சதவீதம் வரம்பு விதிக்கப்படுவது மூலம் அதன் பயன்பாட்டில் தற்போது இருக்கும் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் என்று விவாதத்தின் முடிவில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதேவேளையில் தற்போதைய யூபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அளவை விட 10 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கும் எனவும் இந்த விவாத கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் 2026 வரையிலான கால நீட்டிப்பு PhonePe மற்றும் Google Pay போன்ற ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களுக்கு முக்கியமான ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இதேவேளையில் பேடிஎம், இப்போபே, Navi, Cred போன்ற நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், NPCI தரவுகள் PhonePe சுமார் 7.4 பில்லியன் UPI பரிவர்த்தனைகளை செயலாக்கியதாகவும், Google Pay சுமார் 5.7 பில்லியன் பரிவர்த்தனைகளை எளிதாக்கியதாகவும் தெரிவித்தன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications