இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளும், வாடிக்கையாளர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள வேளையில் நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தற்போது டிஜிட்டல் பேமெண்ட் துறையில் QR Code வாயிலாகச் செய்யப்படும் அனைத்து பேமெண்ட்களும் வங்கிக் கணக்குடன் மற்றும் டெபிட் கார்டு வாயிலாகத் தான் செய்யப்படுகிறது. இதை விரிவாக்கம் செய்யும் விதமாகக் கிரெடிட் கார்டு பயன்படுத்த ஆர்பிஐ சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
இதைச் செயல்படுத்த உள்ளதாக நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
NPCI அமைப்பு
நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா தற்போது அனைத்து வங்கிகளிடமும் QR Code பேமெண்ட் நெட்வொர்க்-ல் ரூபே கிரெடிட் கார்ட் பணப் பரிமாற்றங்களை ஏற்றுக்கொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது மட்டும் நடந்தால் கிரெடிட் கார்டு வர்த்தகம் புதிய வரலாற்று உச்சத்தைத் தொடும்.
கிரெடிட் கார்டு பேமெண்ட்
இதேவேளையில் கிரெடிட் கார்டு பேமெண்ட்-ல் 2 சதவீதம் அக்செப்டன்ஸ் கட்டணம் இருக்கும் நிலையில், இதை எளிமையாக்கும் விதமாக நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா முக்கிய முடிவையும் எடுத்துள்ளது. அதாவது பெரிய வியாபாரிகளிடம் மட்டும் அக்செப்டன்ஸ் கட்டணத்தை வசூலித்துவிட்டு, சிறு வியாபாரிகளுக்கு இதில் விலக்கு அளிக்கத் திட்டமிட்டு உள்ளது.
NPCI சிஇஓ திலீப்
நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ -வான திலீப் கூறுகையில் தினமும் 100 கோடி பணப் பரிமாற்றங்களை டிஜிட்டல் பிளாட்பார்ம்ஸ் வாயிலாகச் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். இதை எட்ட இரண்டு பிரிவை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளோம்.
2 முறை
ஒன்று கான்டெக்ட்லெஸ் பேமெண்ட்-ஐ எளிமையாக்கும் கார்டு டோக்னைசேஷன் முறை, 2வதாக டோல் கலெக்ஷன் போல் பார்கிங், பெட்ரோல் பங்க் போன்ற பல இடத்தில் டிஜிட்டல் பேமெண்ட் முறையைக் கட்டாயமாகக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கிரெடிட் கார்டு
டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் தற்போது இந்தியா முழுவதும் பரவி இருக்கும் எளிய பேமெண்ட் முறையான QR Code பேமெண்ட்-ஐ சேவையில் கிரெடிட் கார்டு மூலம் பேமெண்ட் செய்ய முடிந்தால் பல கோடி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் அதிகளவிலான பணத்தைப் பயன்படுத்தத் துவங்குவார்கள். இது கிரெடிட் கார்டு சேவை நிறுவனங்களுக்கும், கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கும் ஜாக்பாட் தான்.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications