இந்திய அரசு மக்களின் நிதியியல் பாதுகாப்பிற்குப் பல திட்டங்களை அறிவித்திருக்கும் வேளையில், 2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் NPS Vatsalya என்னும் திட்டம் குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் சாதாரண என்பிஎஸ் திட்டம் போலவே இயங்கும் காரணத்தால் பிற சந்தை முதலீட்டு திட்டத்தை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட Sukanya Samriddhi Yojana - SSY திட்டத்தை காட்டிலும் அதிகம் லாபம் கிடைக்கக் கூடியதாக உள்ளது இந்த NPS Vatsalya திட்டம்.

SSY Vs NPS Vatsalya: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தை போலவே குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு NPS Vatsalya திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் இது சாதாரண என்பிஎஸ் திட்டம் போலவே இயங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
18 வயதில் முதிர்வு: இதேபோல் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் இருப்பது போலவே குழந்தைகள் 18 வயதுக்கு வந்த உடன் கணக்கை முதிர்ச்சி அடையும் வசதி போலவே NPS Vatsalya திட்டம் குழந்தைகள் 18 வயது வந்த பிறகு, இக்கணக்கில் சேமிக்கப்பட்ட தொகை, நிலையான என்.பி.எஸ். கணக்கிற்கு மாற்றப்படும். குழந்தைகளுக்கு விருப்பும் இல்லாத பட்சத்தில் இதை NON NPS கணக்காகவும் மாற்றிக்கொள்ள முடியும்.
முதலீட்டு முறை: சுகன்யா சம்ரித்தி யோஜனா வெறும் சிறுசேமிப்பு திட்டமாகவே இயங்கும் காரணத்தால் இதில் கிடைக்கும் வட்டி வருமானம் வங்கிகளில் வழங்கப்படும் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை விட அதிகமாக இருந்தாலும் NPS திட்டத்திற்கு இணையாக இருக்காது.
இதற்கு முக்கியமான காரணம் NPS கணக்கில் முதலீடு செய்யப்படும் பணம், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கில் முதலீடு செய்யப்படும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவது இல்லை, இதனால் வட்டி வருமானம் குறைவாகவே கிடைக்கும்.
வட்டி வருமானம்: 2024-2025 நிதியாண்டுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 8.20% ஆகும். ஆனால் என்பிஎஸ் கணக்கில் செய்யப்படும் முதலீடு மற்றும் அதன் பங்கு பொறுத்து 12 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமாக வட்டி வருமானத்தைப் பெற முடியும்.
முக்கிய பலன்: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்குப் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்ய முடியும். NPS Vatsalya திட்டத்திற்கு தற்போது அடிப்படை வரம்பு இல்லை, ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற வித்தியாசமும் இல்லை.
வரி சலுகை: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். ஆனால் NPS திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 80சி இல்லாமல் 80CCB (1B) கீழ் தனிப்பட்ட முறையில் 50000 ரூபாய் வரையில் வரி சலுகை பெற முடியும்.
ஜாக்பாட்: NPS Vatsalya திட்டத்தைத் தேர்வு செய்தால் 80சி முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு 80CCB (1B) கீழ் தனிப்பட்ட முறையில் 50000 ரூபாய் வரையில் வரிச் சலுகை பெற முடியும். இதுவரையில் NPS திட்டத்தில் முதலீடு செய்யாதவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications