2024 முதல் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அன்று NPS வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அப்போதே நிர்மலா சீதாராமன் NPS வாத்சல்யாவில் முதலீடு செய்வதற்கான ஆன்லைன் தளத்தையும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மைனர் குழந்தைகளுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) கொண்ட கார்டையும் நிர்மலா சீதாராமன் வழங்க உள்ளார்.
இங்கு நடக்கும் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 75 இடங்களில் ஒரே நேரத்தில் NPS வாத்சல்யா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NPS வாத்சல்யா, ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க முடியும் மற்றும் கூட்டு வட்டியின் நன்மையினால் நீண்ட கால செல்வத்தை உருவாக்க முடியும்.
குழந்தைகள் மேஜர் ஆனவுடன், குழந்தையின் கணக்கு வழக்கமான NPS கணக்காக மாற்றப்படும். பெற்றோர்கள் மாதந்தோறும் 500 ரூபாய் அல்லது வருடாந்திர பங்களிப்பாக 6,000 ரூபாயுடன் தொடங்கலாம். NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பெயரில் ஆண்டுதோறும் ரூ 1,000 முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இது அனைத்து பொருளாதார பின்னணியில் உள்ள குடும்பங்களுக்கும் முதலீடு செய்ய ஏற்றதாக இருக்கும்.
NPS வாத்சல்யா குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க புதிய முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பில் இந்தத் திட்டம் ஒரு முக்கிய படியாகும். குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஆரம்பத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டம் PFRDA அமைப்பின் கீழ் இயங்குகிறது.
எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு நிதி சுதந்திரம் வழங்குவதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான NPS திட்டத்தில் "Annuity" கட்டுப்பாடு இருக்காது என்றும் கூறப்படுகிறது.
NPS வாத்சல்யாவிற்கு யார் தகுதியானவர்?: இந்தியக் குடிமக்கள், NRI-கள் அல்லது OCI-கள் என அனைத்துப் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் மைனர் குழந்தைகளுக்காக NPS வாத்சல்யா கணக்கைத் தொடங்கத் தகுதியுடையவர்கள்.
NPS வாத்சல்யா திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் NPS வாத்சல்யா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications