NPS வாத்சல்யா: நாளை முதல் உங்கள் குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க புதிய ஓய்வூதிய திட்டம்!

2024 முதல் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அன்று NPS வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அப்போதே நிர்மலா சீதாராமன் NPS வாத்சல்யாவில் முதலீடு செய்வதற்கான ஆன்லைன் தளத்தையும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மைனர் குழந்தைகளுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) கொண்ட கார்டையும் நிர்மலா சீதாராமன் வழங்க உள்ளார்.

இங்கு நடக்கும் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 75 இடங்களில் ஒரே நேரத்தில் NPS வாத்சல்யா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 NPS வாத்சல்யா: நாளை முதல் உங்கள் குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க புதிய ஓய்வூதிய திட்டம்!

NPS வாத்சல்யா, ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க முடியும் மற்றும் கூட்டு வட்டியின் நன்மையினால் நீண்ட கால செல்வத்தை உருவாக்க முடியும்.

குழந்தைகள் மேஜர் ஆனவுடன், குழந்தையின் கணக்கு வழக்கமான NPS கணக்காக மாற்றப்படும். பெற்றோர்கள் மாதந்தோறும் 500 ரூபாய் அல்லது வருடாந்திர பங்களிப்பாக 6,000 ரூபாயுடன் தொடங்கலாம். NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பெயரில் ஆண்டுதோறும் ரூ 1,000 முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இது அனைத்து பொருளாதார பின்னணியில் உள்ள குடும்பங்களுக்கும் முதலீடு செய்ய ஏற்றதாக இருக்கும்.

NPS வாத்சல்யா குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க புதிய முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பில் இந்தத் திட்டம் ஒரு முக்கிய படியாகும். குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஆரம்பத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டம் PFRDA அமைப்பின் கீழ் இயங்குகிறது.

எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு நிதி சுதந்திரம் வழங்குவதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான NPS திட்டத்தில் "Annuity" கட்டுப்பாடு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

NPS வாத்சல்யாவிற்கு யார் தகுதியானவர்?: இந்தியக் குடிமக்கள், NRI-கள் அல்லது OCI-கள் என அனைத்துப் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் மைனர் குழந்தைகளுக்காக NPS வாத்சல்யா கணக்கைத் தொடங்கத் தகுதியுடையவர்கள்.

NPS வாத்சல்யா திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் NPS வாத்சல்யா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+