டெல்லி : குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள என்பிஎஸ் வாத்சல்யா (NPS Vatsalya) திட்டத்திற்கு இனி வருமான வரி விலக்கு பெற முடியும் என்ற அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குழந்தைகளுக்கு என தொடங்கப்பட்ட என்பிஎஸ் வாத்சல்யா ஓய்வூதிய திட்டத்தில் பங்களிப்பு செய்பவர்கள் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சிசிடி(1 பி) (80CCD(1B))- இன் கீழ் வரி விலக்கு பெற முடியும் என அறிவித்தார்.

இந்தியாவில் தற்போது பழைய வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையின் கீழ் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்பவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தாங்கள் செய்யும் பங்களிப்புகளை வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80சிசிடி(1 பி) இன் கீழ் குறிப்பிட்டு வரிசலுகை பெற முடியும். ஆனால் புதிய வரி நடைமுறையின் கீழ் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காது.
இதனிடையே நிதி நிலையை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் பங்களிப்பு செய்பவர்கள் அதனை குறிப்பிட்டு வரிச்சலுகை பெற முடியும் என அறிவித்தார். எனவே வரி சேமிப்புக்காகவே பலரும் இந்த திட்டத்தின் கீழ் பங்களிப்பு செய்வார்கள் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் பங்களிப்பு செய்பவர்கள் ஒரு நிதியாண்டில் 50 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்கு பெறுவதற்கான தகுதியை பெறுகின்றனர்.
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை கடந்தாண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டிருக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக என்பிஎஸ் கணக்கினை தொடங்கி பணத்தை சேமித்து வரலாம். குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியதும் அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய தேசிய ஓய்வூதிய திட்டத்தின் அங்கமாகவே என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வாகம் செய்கிறது.
குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் செய்யப்படும் பணத்தை திரும்ப பெற முடியாது. அதன் பிறகு கல்வி, மருத்துவ காரணங்களுக்காக இதில் செய்த சேமிப்பில் இருந்து 25 சதவீதம் தொகையை பெறலாம். பின்னர் தேவைப்பட்டால் 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர் தேசிய ஓய்வூதிய கணக்கான என்பிஎஸ் திட்டத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. eNPS இணையதளம் வாயிலாக குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இந்த கணக்கை தொடங்க முடியும்.
Story written- Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications