மத்திய அரசின் கீழ் இயங்கும் NPCI அமைப்பின், சர்வதேச அமைப்பான NPCI இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் லிமிடெட் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும் டிஜிட்டல் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (Network International) நிறுவனத்துடன் இணைந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் யூபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள நெட்வொர்க் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் பாயிண்ட்-ஆஃப்-சேல் (POS) டெர்மினல்கள் மூலம் கியூஆர் குறியீடு வாயிலாக யூபிஐ பணப்பரிவர்த்தனை சேவை வழங்கப்படும்.

இதன் மூலம், இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில், இந்தியாவில் செய்வது போலவே விரைவான மற்றும் பாதுகாப்பான முறையில் பணத்தை அவர்களது யூபிஐ செயலி வாயிலாகச் செலுத்த முடியும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராச அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய எமிரேட்ஸ்-ன் கூட்டமைப்பு தான். இந்த 7 நாடுகளில் இருப்பவர்கள் யூபிஐ சேவையைப் பயன்படுத்த முடியும்.

இந்திய அரசு உருவாக்கிய யுபிஐ சேவையை ஏற்றுக்கொள்ளும் உலக நாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று NPCI வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விரிவாக்கம் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள ரீடைல் கடைகள், உணவகங்கள், சுற்றுலாத் தளங்கள் போன்ற இடங்களில் இந்திய சுற்றுலா பயணிகளும், என்ஆர்ஐ-களும் யூபிஐ மூலம் பணம் செலுத்த முடியும்.
கடந்த 2024 ஆம் ஆண்டில், வளைகுடா (GCC) நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 9.8 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், UAE- க்கு மட்டும் 5.29 மில்லியன் இந்தியர்கள் சுற்றுலா செல்வார்கள் என NPCI தெரிவித்துள்ளது. இதை அடிப்படையாக வைத்தே தற்போது UPI சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை வேகமாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், இந்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் NPCI இண்டர்நேஷனல் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் யூபிஐ சேவையைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, நேபாளம், இலங்கை, மொரிஷியஸ், UAE , சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் யூபிஐ பணப்பரிவர்த்தனை S ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
More From GoodReturns

துபாய் வாழ் இந்தியர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஈரான் போர் விவகாரத்தில் 19 இந்தியர்கள் கைது!!

துபாயில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு; ஈரான் போர் நீடிப்பதால் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications