இந்தியா மட்டும் அல்லாமல் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்களைப் புரட்டிப்போட்ட என்எஸ்ஈ மோசடி வழக்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இமயமலை சாமியார் முன்னாள் என்எஸ்ஈ தலைமை செயல் அதிகாரியான ஆனந்த சுப்பிரமணியன் தான் எனச் சிபிஐ தெரிவித்த நிலையில், இன்று இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணா சிபிஐ விசாரணைக்காகச் சிபிஐ சிறையில் அடைத்துள்ளது.
கடந்த வாரம் இவ்வழக்கை விசாரணை செய்த சிபிஐ கடுமையான கேள்விகளைக் கேட்ட நிலையில் சிபிஐ அமைப்பு மிகவும் மேகமாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சித்ரா ராமகிருஷ்ணா
தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவை, 2018ஆம் ஆண்டுத் தேசிய பங்குச் சந்தையில் செய்த பல்வேறு மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டுத் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றக் காவலுக்குத் திங்கள்கிழமை டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
14 நாள்
மார்ச் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்ட சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், ராமகிருஷ்ணா ஒரு விஐபி அல்ல என்றும், சிறையில் அவருக்குச் சிறப்பு வசதிகள் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
வீட்டில் சமைத்த உணவு,
முன்னதாக, சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு வீட்டில் சமைத்த உணவு, பகவத் கீதை மற்றும் சில பேஸ் மார்ஸ் வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். ஆனால் ராமகிருஷ்ணா-வுக்கு மருந்துகள், கண்ணாடி மற்றும் பிரார்த்தனைக்கான புத்தகம் மட்டுமே எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திகார் சிறை உணவு
வீட்டில் சமைத்த உணவை குறித்த கோரிக்கைக்கு நீதிபதி, "70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் பலர், திகார் சிறை உணவைச் சாப்பிடுகிறார்கள். நானே திகார் சிறை உணவைச் சாப்பிட்டு உள்ளேன், நன்றாகத் தான் உள்ளது. சிறையில் யாருக்கும் சிறப்பு வசதி இருக்காது.
விஐபி இல்லை
விஐபி கைதிகளுக்கு எல்லா வசதிகளும் தேவை, அவர்களுக்காக சிறையில் விதிகள் மாற்றப்பட வேண்டும். அனைத்து குற்றவாளியும் சட்டத்தின் முன்பு ஒன்று தான். மேலும் சித்ரா ராமகிருஷ்ணா விஐபி இல்லை எனச் சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் திட்டவட்டமாகக் கூறினார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications