மும்பை: தேசிய பங்கு சந்தை என்றழைக்கப்படும் NSE தொழில் நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது.
இதில் ஸ்பாட் நிஃப்டி, பேங்க் நிஃப்டி மற்றும் நிஃப்டி சார்ந்து குறியீடுகள் அனைத்தும் வர்த்தகமாகவில்லை. இதன் காரணமாக NSE-யில் வர்த்தகர்கள் எந்த ஈக்விட்டி ஆர்டர்களும் போட இயலவில்லை என்றும் அறிவித்துள்ளது.
எனினும் மும்பை பங்கு சந்தை எப்போதும் போல் வர்த்தகமாகிக் கொண்டுள்ள நிலையில், வர்த்தகர்கள் அதில் எப்போதும் போல வர்த்தகம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன தான் பிரச்சனை
குறிப்பாக என்எஸ்இ-யில் உள்ள 11 குறியீடுகளும் வர்த்தகமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இரண்டு சேவை இணைப்புகள் மூலம், பல தொலைத்தொடர்பு இணைப்புகள் மூலம் என்எஸ்இ செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேவை வழங்குனர்கள் இருவரும் தங்களது இணைப்புகளில் சிக்கல் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக என்எஸ்இ சேவையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
சந்தை அப்டேட் ஆகவில்லை
காலை 10.15 மணிக்கு நிஃப்டி இன்டெக்ஸ் முந்தை நாளின் முடிவு விலையில் இருந்து 113 புள்ளிகள் அதிகரித்து, 14,820 புள்ளிகளாகவே இருந்தது. இதே பேங்க் நிஃப்டி 1.45% அதிகரித்து 35,626.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இந்த விலையில் மாற்றம் இல்லை என செய்திகள் கூறுகின்றன. எனினும் நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டியின் பியூச்சர் விலைகள் வர்த்தகமாகிக் கொண்டுள்ளதாகவும் என்டிடிவி செய்திகள் கூறுகின்றன.
எப்போது முடக்கம்
இதற்கிடையில் காலை 11.40 மணிக்கு முடங்கிய என்எஸ்இ சந்தையானது, மீண்டும் வர்த்தகம் 1.15 மணிக்கு தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்எஸ்இ-யில் ஏற்பட்ட இந்த பிரச்சனை காரணமாக இண்டிராடே ஆர்டர்கள் squared off ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் வர்த்தகம் தொடங்கிய பின்னரே உண்மை நிலவரம் என்ன என்று தெரியவரும்.
செபி அபராதம்
என்எஸ்இ உலகின் மிகப்பெரிய பங்கு சந்தை, ஆனால் இது போன்ற தொழில்நுட்ப கோளாறு என்பது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டும் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக செபியும் அபராதம் விதித்தது. இதனால் ஏற்படும் இழப்புகளையும் ஈடு செய்ய கொள்கைகளை கொண்டு வர செபி திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications