டெல்லி: கடந்த 2019 - 20 நிதியாண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் சமூக சேவையில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சந்தை மூலம் நிதி திரட்டும் வகையில் சமூகப் பங்கு வரித்தனை திட்டம் குறித்து அறிவித்தார்.
இதன்படி லாப நோக்கற்ற சமூக சேவை நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலாக முடியும். இதற்கான சட்ட திட்டங்களை உருவாக்க பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது.
இக்குழு சமூகப் பங்கு பரிவர்த்தனை தொடர்பான விதிகளை கடந்த ஆண்டு வெளியிட்டது.
தனிப் பிரிவு அறிமுகம்
தேசிய பங்கு சந்தையில் நிறுவனம் அதன் தளத்தில் சமூக பங்கு பரிவர்த்தனைக்கென்று, தனிப் பிரிவை அறிமுகம் செய்ய செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த தனிப் பிரிவில் தன்னார்வதொண்டு நிறுவனங்கள், லாப நோக்கற்ற நிறுவனங்கள், தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அந்த நிறுவனங்கள் நிதி திரட்டுவது எளிமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செபி ஒப்புதல்
இது குறித்து தேசிய பங்கு சந்தை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான் கூறுகையில், சமூக பங்கு பரிவத்தனை பிரிவை அறிமுகப்படுத்த என் எஸ் இ-க்கு செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த சூழலில் சமூக சேவை நிறுவனங்களிடம் இது குறித்தான விழிப்புணர்வு குறித்தான பணியினை தொடங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.
இந்த அறக்கட்டளைகள் இடம்பெறாது?
செபியின் வரையறைக்கு உட்பட்ட சமூக வலைதள நிறுவனங்களே சமூகப் பங்கு பரிவர்த்தனை பிரிவில் பதிவு செய்து கொள்ள முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களின் அறக்கட்டளைகள், அரசியல் மற்றும் மத நிறுவனங்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகியவை இப்பிரிவில் இடம் பெற முடியாது.
நல்ல திட்டம் தான்
மொத்தத்தில் செபியின் இந்த அறிப்விப்பால் விரைவில் என் எஸ் இ-யில் சமூக சேவை வழங்கும் நிறுவனங்களும் இடம்பெறலாம். இதன் மூலம் தேவையான நிதியினை திரட்டிக் கொள்ளலாம் . இது சமூக வலைதள நிறுவனங்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம். அதேசமயம் முதலீட்டாளர்களுக்கும் குறைந்த ரிஸ்குள்ள முதலீடாக அமையலாம். எனினும் இது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது மட்டுமே தெரியவரும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications