சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரேன், சஞ்சய் பாண்டே ஆகியோர் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
பங்கு சந்தை ஊழல் வழக்கில் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழும அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது.
ஏற்கனவே பல்வேறு மோசடிகளும், பிரச்சனைகளில் சிக்கியுள்ள சித்ரா ராமகிருஷ்ணனுக்கு, மேற்கொண்டு நெருக்கடிகள் அதிகரித்துள்ளது.
ஊழலுக்கு பேர் போன சித்ரா ராமகிருஷ்ணன்
என் எஸ் இ-யில் நடந்த ஊழலுக்கு பேர்போன சித்ரா ராமகிருஷ்ணன், இமயமலை சாமியாருடன் கலந்து ஆலோசித்ததோடு மட்டும் அல்ல, பங்கு சந்தை பற்றிய ரகசிய விவரங்களையும் அவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டது. இதனால் இவரின் மீது வழக்கு பதிவு செய்து , கைது செய்யப்பட்டுள்ளார்.. தற்போது திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
அதிக லாபம் ஈட்ட உதவி
என் எஸ் இ சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்களை பகிர்ந்தது மட்டும் அல்ல, சில புரோக்கர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அதிக லாபம் ஈட்ட உதவியதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள சித்ரா ராமகிருஷ்ணன், மத்தளம் போல சுற்றி சுற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மீண்டும் ஒரு எஃப்ஐஆர்
இதற்கிடையில் தற்போது சித்ரா ராமகிருஷ்ணன், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் ரவி நரேன். மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகிய மூவர் மீதும் சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன குற்றச்சாட்டு?
சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரேன், சஞ்சய் பாண்டே ஆகியோர் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் அதிகாரிகள், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒட்டுகேட்பு விவகாரமானது 2009 - 2017 வரையில் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய விவரங்கள் பகிர்வு
ஏற்கனவே கோ லொகேஷன் வழக்கில் அபாரதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக இந்த வழக்கும் சேர்ந்துள்ளது.
பங்கு சந்தை வர்த்தகத்தினை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட திட்டமான இந்த கோ லொகேஷனில், பல முறைகோடுகளை செய்து, சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு முன்னதாக பங்கு சந்தை தொடர்பான விவரங்களை பகிர்ந்ததாக என் எஸ் இ மீது குற்றாச்சாட்டு எழுந்தது.
அபராதம்
இது குறித்து 18 பேருக்கு அபராதமும் விதித்துள்ளது. குறிப்பாக சித்ரா ராம கிருஷ்ணனுக்கு 7 கோடி ரூபாயும், ரவி நாரயணனுக்கு 5 கோடி ரூபாயும், ஆனந்த் சுப்ரமணியனுக்கு 5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இவர்கள் தவிர வே2வெல்த், ஜிகேஎன், சம்பார்க் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் 6 கோடி, 5 கோடி, 2 கோடி ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications