குஜராத், ராஜஸ்தான் ஆலைகளில் முதலீடு.. என்டிபிசி ஆர்இஎல் ரூ.500 கோடி வங்கி கடன் பெற ஒப்புதல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய அனல் மின் கழகத்தின் துணை நிறுவனமான ஆர் இ எல் நிறுவனம் (NTPC REL), முதல் பசுமைக் கால கடனுக்காக, பேங்க் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த பசுமைக் கால கடனின் மதிப்பு 500 கோடி ரூபாயாகும். இது குறித்து தேசிய அனல் மின் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த தொகையானது அதன் இரண்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இது ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் நிறுவ உள்ள அதன் இரண்டு சோலார் திட்டங்களுக்கானது என்று அறிவித்துள்ளது.

ஏடிஎம் கார்டு, பரிவர்த்தனைகளில் அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்..! ஏடிஎம் கார்டு, பரிவர்த்தனைகளில் அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்..!

ரூ.500 கோடி கடன்

ரூ.500 கோடி கடன்

என்டிபிசி ஆர்.இ.எல் நிறுவனம் (NTPC REL), பேங்க் ஆப் இந்தியாவில், 500 கோடி ரூபாய்க்கான 15 வருட கால முதல் பசுமைக் கடனுக்கு கையெழுத்திட்டுள்ளது. இந்த கடன் மூலம் ராஜஸ்தானில் 470 மெகா வாட் சோலார் திட்டத்திற்கும், இதே குஜராத்தில் 300 மெகாவாட் சோலார் திட்டத்திற்கும் கையெழுத்திட்டுள்ளது.

பசுமை கடன் என்றால்?

பசுமை கடன் என்றால்?

பசுமை கடன் என்பது சுற்றுசூழலில் தாக்கத்தினை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு நிதியளிக்கும் ஒரு வகையான கடன் ஆகும். என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தின் 100% துணை நிறுவனமான என்டிபிசி ஆர்.இ.எல், தற்போது 3,450 மெகாவாட் திறனை கொண்டுள்ளது. இதில் 820 மெகாவாட் தற்போது கட்டுமான நிலையில் உள்ளது. இதில் 2,630 மெகா வாட் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

புதுபிக்கதக்க ஆற்றல் உற்பத்தி

புதுபிக்கதக்க ஆற்றல் உற்பத்தி

என்டிபிசி ஆர்.இ.எல் நிறுவனம் கடந்த அக்டோபர் 7, 2021 அன்று பதிவு செய்தது. புதுபிக்கதக்க ஆற்றலை உருவாக்க, என்டிபிசி நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது அதன் துணை நிறுவனம் மூலம் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது.

என்டிபிசி ஆர்.இ.எல்லின் இலக்கு

என்டிபிசி ஆர்.இ.எல்லின் இலக்கு

இந்த நிறுவனம் அடுத்த 2032-க்குள் 60 ஜிகாவாட் புதுபிக்கதக்க எரிசக்தி திறனை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது 70 திட்டங்களில், 66 ஜிகாவாட் திறன் கொண்ட நிறுவப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 18 ஜிகாவாட் கட்டுமானத்தில் உள்ளது.

என்டிபிசி-யின் திட்டம்

என்டிபிசி-யின் திட்டம்

இதே போல என்டிபிசி நிறுவனம் அதன் விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, கடன் பத்திர வெளியீடுகள் மூலம் 18,000 கோடி ரூபாய் மூலதனத்தை திரட்ட பங்குதாரர்களின், அனுமதியை பெற்றுள்ளதாக பொதுத் துறையைச் சேர்ந்த இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NTPC REL of signs first green term loan pact of Rs.500 crore with BOI

NTPC REL of signs first green term loan pact of Rs.500 crore with Bank of india
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X