மும்பை: உலகின் முன்னணி ஏஐ தொழில்நுட்ப நிறுவனமாக என்விடியா (Nvidia)செயல்படுகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் ஜென்சென் ஹூவாங், தனக்கு பிடித்த உணவு சிக்கன் பிரியாணி என கூறியுள்ளார்.
உலகளவில் தற்போது ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கருவிகளுக்கு தேவையான ஸ்மார்ட் சிப்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது என்விடியா நிறுவனம். அமெரிக்காவை சேர்ந்த என்விடியா நிறுவனம் உலகிலேயே இந்த பிரிவில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது. இதனால் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரிக்கும் வேளையில், அதன் உரிமையாளர் ஜென்சென் ஹூவாங்கின் சொத்து மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சென் ஹூவாங் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். தன்னுடைய இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக மும்பையில் நடைபெற்ற என்விடியா செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இந்தியாவில் தனக்கு பிடித்த உணவு குறித்து குறிப்பிட்ட அவர் சிக்கன் பிரியாணி என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து விரிவாக உரையாற்றிய ஜென்சென் ஹூவாங் சிக்கன் பிரியாணியை உதாரணமாகக் கொண்டு உள்ளுணர்வு மற்றும் நுண்ணறிவுக்கு இடையிலான தொடர்பை விளக்கினார்.
உதாரணமாக நுண்ணறிவுக்கு சிந்தனை தேவை, சிந்தனைக்கு பகுத்தறிவு தேவை எனக்கு பிடித்த இந்திய உணவு எது என்று நீங்கள் கேட்டால் சிக்கன் பிரியாணி என்று நான் கூறுவேன். நான் அதைப்பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை அதைப்பற்றி நான் தர்க்கம் செய்ய வேண்டியது இல்லை,ஏனென்றால் எனக்கு அது தெரியும் எனக் கூறியுள்ளார்.
மனிதர்களைப் போலவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு உடனடியாக சில விஷயங்களை அதிக சிந்தனை இன்றி நினைவுபடுத்த முடியும் என்பதை நோக்கமாக கொண்டு தான் இந்த சிக்கன் பிரியாணி உதாரணத்தை அவர் குறிப்பிட்டார்.
அப்போது மனிதர்களின் வேலைகளை செயற்கை நுண்ணறிவு பறித்து விடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த ஜென்சென் ஹூவாங் எனக்கு அது முற்றிலும் தெரியாது, ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நபர்கள் உங்களுடைய வேலையை பறிக்கப் போகிறார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும் என்விடியா நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் தன்மை கொண்டது என தெரிவித்தார்.
நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது மனிதர்கள் அவர்களுக்கான உதவியாளராக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நியமனம் செய்வார்கள், மனிதர்கள் மறக்கும் விஷயங்களை எல்லாம் நினைவு படுத்த கூடிய ஒரு உதவியாளராக செயற்கை நுண்ணறிவு திறன் இருக்கும் என கூறினார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications