இந்தியாவின் முன்னனி பேஷன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளரான நய்கா நிறுவனம் அதன் செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.
இது முதலீட்டாளர்களும், பங்கு தாரர்களும் எதிர்பார்த்ததை போலவே இந்த நிறுவனம் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.
கடந்த ஆண்டினை காட்டிலும் 344% நிகரலாபம் அதிகரித்து, 5.2 கோடி ரூபாயாக செப்டம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது.
வருவாய் விகிதம்
இதன் வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 39% அதிகரித்து, 1230 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வரிக்கு முந்தைய லாபம் 542% அதிகரித்து, 8.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் ஒருங்கிணைந்த மொத்த விற்பனை (GMV) கடந்த ஆண்டினை காட்டிலும் 45% அதிகரித்து, 2345 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மார்ஜின் வரம்பு
அதன் மொத்த மார்ஜின் வரம்பானது கடந்த ஆண்டில் 42.7% ஆக இருந்த நிலையில், அது தற்போது 45.3% ஆக உயர்ந்துள்ளது.
இதே இதன் எபிட்டா விகிதம் 112 அதிகரித்து, 61 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் எபிட்டா மார்ஜின் 5% மேம்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 3.3% ஆக இருந்தது.
பிரிவு வாரியாக விற்பனை
அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவில் மொத்த விற்பனயானது 39% அதிகரித்து, 1630 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே ஆர்டர்கள் 39% அதிகரித்து, 8.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதே பேஷன் பிரிவில் 43% விற்பனை அதிகரித்து, 599 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வலுவான வளர்ச்சி
நிறுவனத்தின் செயல் திறன் குறித்து பேசிய நய்காவின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பல்குனி நாயர், எங்கள் வணிகம் நல்ல வலுவான வளர்ச்சியினை காட்டியுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டுமே வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது எங்களின் மார்ஜின் மேம்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
விரிவாக்கம்
கொரோனாவுக்கு பிறகு புதிய ஸ்டோர்கள் மற்றும் புதிய முதலீடுகளை செய்து வருகின்றோம். இது எங்கள் வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகின்றது. இது விற்பனையை அதிகரிக்கவும் உதவியது. அழகு, பர்சனல் கேர் மற்றும் ஆரோக்கியத்திற்கான நுகர்வோர் பொருட்கள் என பலவற்றின் தேவையானது அதிகரித்துள்ளது. இப்பிரிவில் நுகர்வும் அதிகரித்து வருகின்றது.
கவனம்
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நல்ல ஆரோக்கியமான அறிகுறி காணப்படுகின்றது.
தொடர்ந்து சர்வதேச பிராண்டுகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், எதிர்கால வளர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப முதலீடு செய்து வருவதாகவும் நாயர் தெரிவித்துள்ளார்.
இன்றைய பங்கு விலை நிலவரம்
நய்காவின் பங்கு விலையானது, என்எஸ்இ-யில் 2.83% அதிகரித்து, 1185.40 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது, 2.44% அதிகரித்து, 1185.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2574 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 975.50 ரூபாயாகும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications