மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு தவணை முறையில் பகிர்ந்தளித்து வருகிறது. தற்போது இந்த மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மத்திய அரசு 16வது நிதிக்குழுவை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்துள்ளது. அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அம்மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் தமிழகம் வந்த அரவிந்த் பனகாரியா தலைமையிலான நிதிக் குழு உறுப்பினர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாநில அரசுகளுக்கான வரி பகிர்வை 41 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நிதிக் குழுவிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதுதவிர, கேரளா, குஜராத், கோவா,பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு பனாகாரியா தலைமையிலான குழு சென்றபோதும், அம்மாநில அரசுகளும் மாநில அரசுகளுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் அரவிந்த் பனகாரியாவிடம் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், ஒடிசா அரசும் மாநில அரசுகளுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கொடி பிடித்துள்ளது.

நான்கு நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ள மத்திய நிதிக் குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் அம்மாநில மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது, நிதிக் குழுவிடம், மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மோகன் சரண் மாஜி கோரிக்கை விடுத்தார். மேலும், மத்திய வரிகளில் முந்தைய நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தனது மாநிலத்தின் பங்கை தற்போதைய 4.52 சதவீதத்திலிருந்து 4.96 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
செஸ் மற்றும் உபரி கட்டண வருவாயிலும் மாநிலங்கள் தங்கள் பங்கினை பெறும் வகையில் அவற்றை பிரிக்கக்கூடிய தொகுப்பில் சேர்க்க வேண்டும் என்று ஒடிசா அரசு கோரிக்கை விடுத்தது. பெரும்பான்மையான மாநிலங்கள் மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீமாக உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கியுள்ளதால், மத்திய நிதிக் குழு இதனை பரிசீலித்து தனது பரிந்துரையை மத்திய அரசிடம் சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications