டெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2020 - 2024ம் ஆண்டில் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) தெரிவித்துள்ளது.
இது கடந்த 2013 - 2017ம் ஆண்டின் சராசரியான 7.4 சதவிகிதத்தினை விட குறைவு என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு வெளியிட்ட பொருளாதார கண்ணோட்டத்தில் 2013 - 2017ம் ஆண்டை விட, 2020 - 2024ஆம் ஆண்டில் இந்தியா மிக சாதாரணமாகவே வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்
வளர்ச்சி மிக சாதாரணமாக வளரும் என்று கூறப்பட்டாலும், அதே நேரத்தில் வங்கித்துறை மீண்டும் வளர ஆரம்பித்துள்ளது என்றும் ஆசியவிற்காக பொருளாதார பார்வையில் அது கூறியுள்ளது. வங்கித் துறையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தக்கவைத்துக் கொள்வது இந்தியாவுக்கு ஒரு முக்கியமான சவால் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பின் ஏற்றத் தாழ்வைக் கட்டுப்படுத்துவது, நகரமயமாக்கலுக்கு தீர்வு காணும் போது முதலீடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை பரப்புவது முக்கியமானது என்றும் கூறியுள்ளது.
டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த வேண்டும்
இதே இந்த அமைப்பு 2020 - 2024ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது கடந்த 2013 - 2017ல் 6.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையின் படி, சீனா தேவைக்கும் சப்ளைக்கும் இடையிலான டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதே இந்தியாவைப் பொறுத்தவரை இதே நேரத்தில் இந்தியாவில் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதும், டிஜிட்டல் சாதனங்களுக்கான அணுகலை அதிகரிப்பதும் முக்கியம் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு தேவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
இதே சீனா அமெரிக்கா இடையே தொடர்ந்து நிகழ்ந்து வரும் வர்த்தக போர், மேலும் பொருளாதாரங்களில் பலவீனமான போக்கினையே ஏற்படுத்தி வருகிறது. இது ஏற்றுமதி வாய்ப்புகளிலும் பலவீனமாக வாய்ப்புகளையும், நிச்சயமற்ற தன்மையே சேர்க்கிறது. மேலும் இது தொழிலாளர் சந்தையில் உள்ள ஸ்திரத்தன்மை மற்றும் சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டில் உள்ள ஊழியர்களிடம் இருந்து வருவதும், இதே உள்நாட்டு நுகர்வு நீடிக்கும் நிலை, மேலும் உள்நாட்டு தேவைக்கு தொடர்ந்து அதிக ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், இது பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.
அரசின் நடவடிக்கைகள்
நிலவி வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பல அதிரடியான திட்டங்களையும் தீட்டி வருகிறது. இது வரும் காலாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு துணைபுரியலாம் என்றும் கூறப்படுகிறது. பல சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் கொடுத்து வரும் பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி குறித்து மந்த நிலையை குறிப்பிட்டாலும், அரசின் நடவடிக்கைகளால் இது மேம்படும் என்றே கருதலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications