இந்தியாவின் டாப் 7 பெரு நகரங்களில் அலுவலகங்களின் குத்தகை அளவீடு கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் சுமார் 36 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் வெறும் 55 லட்ச சதுரடி அலுவலகம் மட்டுமே மீண்டும் செயல்பாட்டில் உள்ளது என JLL நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் காரணத்தால் நிறுவனங்களுக்கு அலுவலகம் தேவையில்லாத ஒன்றாக மாறியுள்ளது. கிட்டதட்ட ஒரு வருடம் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலேயே பணியாற்றி வரும் நிலையில் வர்த்தகத்திலும் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் உள்ளது.
செலவுகள் குறைப்பு
இதனால் நிறுவனங்கள் அலுவலகங்களை அதிகளவில் குறைத்துள்ளது மட்டும் அல்லாமல் மூடப்பட்டும் உள்ளது. மேலும் பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரையில் நிறுவன செலவுகளைக் குறைக்கவும், ஊழியர்களின் வசதிகளுக்காகவும் 60 முதல் 80 ஊழியர்களைத் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி வருகின்றனர்.
அலுவலகங்களுக்கான தேவை
இதன் காரணமாகவே தற்போது பெரு நகரங்களில் அலுவலகங்களுக்கான தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனாலும் அலுவலகத்திற்கான வாடகை அளவில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் ஆபீஸ் ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
மும்பை அதிகப் பாதிப்பு
2020 ஜனவரி - மார்ச் காலாண்டில் 86 லட்ச சதுரடியாக இருந்த அலுவலகப் பரப்பளவு 2021 ஜனவரி - மார்ச் காலாண்டில் 55 லட்ச சதுரடியாகக் குறைந்துள்ளது. இதில் அதிகளவில் பாதிக்கப்பட்டது மும்பை என்றும், அதிக அலுவலகங்கள் இருக்கும் பெங்களூரில் இதன் அளவு 2.7 லட்ச சதுரடியில் இருந்து 2.2 லட்ச சதுரடியாகக் குறைந்துள்ளது.
புதிய அலுவலகம்
இதேவேளையில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அலுவலகத் தளங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் சுமார் 56 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் சந்தையில் இதற்கான தேவை என்பது மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் ஆபீஸ் ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications