இந்தியாவில் வருட கணக்கில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதன் உச்சக்கட்ட விலையில் பெரிய அளவில் குறைந்த வேளையிலும், ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் தள்ளுபடி விலையில் வாங்கப்பட்ட நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் உள்ளது.
இதன் எதிரொலியாக மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இடைத்தேர்தலில் மோடி அரசு மீண்டும் வெற்றிபெற இடைக்காலப் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலையை 10- 11 ரூபாய் குறைக்கும் எனக் கணிப்புகள் வந்த நிலையில் இது அனைத்தும் பொய்யாய்ப் போனது. இந்த நிலையில் புதிய ரிப்போர்ட் வந்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் ரீடைல் நிறுவனங்கள் டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட 3 ரூபாய் அளவிலான நஷ்டம் அடைந்து வருகின்றனர். அதேசமயம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மீதான லாபம் குறைந்துள்ளது என்று இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை இந்தியாவின் எரிபொருள் சந்தையில் சுமார் 90 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த 3 நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை 2 வருடங்களாக மாற்றவில்லை. ஏறக்குறைய இரண்டு ஆண்டுக் காலமாகப் பெட்ரோல், டீசல் உற்பத்தியில் இருக்கும் உள்ளீடு செலவு அதிகமாக இருக்கும் வேளையில் நஷ்டமும், மூலப்பொருள் விலை குறைவாக இருக்கும்போது லாபமும் ஏற்படுகிறது என இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்ய 85 சதவீதம் இறக்குமதியைச் சார்ந்து இருப்பதால், சர்வதேச எண்ணெய் விலை அடிப்படையில் பொருளின் உள்நாட்டு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக் கச்சா எண்ணெய்யின் சர்வதேசச் சந்தை விலை குறைந்து காணப்பட்டது, ஆனால் ஜனவரி இரண்டாம் பாதியில் மீண்டும் உயர துவங்கியது.
மத்திய அரசின் அறிவுறுத்தல் படி தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2 வருடங்களாக மாறாமல் உள்ளது. இந்த 2 வருடத்தில் பெரும்பாலான காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை குறைவாகவே இருந்தது, ஆனாலும் எண்ணெய் நிறுவனங்கள் முன்பு எதிர்கொண்ட இழப்புகளை ஈடுசெய்யவில்லை.
இதன் வாயிலாகத் தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கும் வேளையில் டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் நஷ்டத்தையும், பெட்ரோல் லிட்டருக்கு வெறும் 3-4 ரூபாய் லாபத்தில் விற்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெட்ரோல், டீசலில் தற்போது எத்தனால் மற்றும் பயோடீசல் கலக்கப்பட்டு வருகிறது.
போகிற போக்கைப் பார்த்தால் தேர்தலுக்குப் பின்பு பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பும் உள்ளது.
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!



Click it and Unblock the Notifications