மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, கச்சா எண்ணெய் விலை விண்ணை தொட்டு, இந்திய பொருளாதாரம் ஒருவித அச்சத்தில் உறைந்திருந்த அந்த இக்கட்டான தருணம், இந்தியா என்னவாகுமோ என்ற கேள்வி ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் எழுந்தபோது, சிறந்த நண்பன் என்பதை மீண்டும் ஒரு முறை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது ரஷ்யா.
முதலில் சீனாவுக்கு செல்ல வேண்டிய பல லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிய அக்வா டைட்டன் (MT Aqua Titan) கப்பல், இந்தியாவின் மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இது வெறும் செய்தி மட்டுமல்ல, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இதனிடையே மத்திய அரசு மங்களூரு துறைமுகத்தில் சரக்கு கட்டணங்களை அதிரடியாக ரத்து செய்து சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க, ரஷ்யாவின் இந்த உதவி கார் மேகங்களுக்கு இடையே கிழித்துக் கொண்டு வரும் சூரிய ஒளியை போல இந்தியாவுக்கு பெரும் நிம்மதியை தந்துள்ளது. போர் முனையில் நெருக்கடி நிலவினாலும், பாரதத்தின் சமையலறைகளும் வாகனங்களும் தடையின்றி இயங்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ள இந்த நட்பு எண்ணெய் குறித்து விரிவாக பார்ப்போம்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால், ஹார்மூஸ் ஜலசந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் விநியோகத்தில் பல சவால்கள் நிலவி வருகிறது. இது தனது தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்யும் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான் ஆபத்து நேரத்தில் உதவும் உற்ற நண்பனாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உடன் அக்வா டைட்டன் என்ற சரக்கு கப்பல் ஆனது மங்களூரு துறைமுகம் வந்துள்ளது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு விதமான பதற்றம் மத்தியில் வந்துள்ள பெரும் ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
கூடுதலாக இதில் ,மற்றொரு ஆறுதலான விஷயம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து LPG ஏற்றிக் கொண்டு வந்த ஒரு சரக்கு கப்பல், இன்று அதிகாலை மங்களூருவில் உள்ள புதிய மங்களூரு துறைமுகத்திற்கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அறிவிப்புகள் இந்தியாவில் எண்ணெய் தட்டுப்பாட்டை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை குறிக்கிறது.
கப்பல் போக்குவரத்து அமைச்சகம் புதிய மங்களூரு துறைமுகத்திற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணங்களை மார்ச் 14 முதல் மார்ச் 31 வரையில் முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இது எரிபொருள் இறக்குமதியை விரைவுபடுத்தவும், தடையின்றி விநியோகம் செய்வதை உறுதி செய்யவும் வழிவகுக்கும்.
பாரசீக வளைகுடா பகுதியில் இருக்கும் 22 இந்திய கப்பல்களும், 611 மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் நடமாட்டத்தை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அக்வா டைட்டன் போன்ற கப்பல்களின் வருகை என்பது வெறும் வணிக ரீதியாக மட்டுமல்ல, இது இந்தியாவின் எனர்ஜி பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு முக்கிய வெற்றியாகும். இதனால் வரும் நாட்களில் சிலிண்டர் விநியோகம் சீராகும் மற்றும் பெட்ரோல்/டீசல் தட்டுப்பாடு ஏற்படாது என்பது உறுதியாகிறது.
More From GoodReturns

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

டிரம்ப்-ன் ராஜதந்திரம்.. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் குட்நியூஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ஈரான் போர்: டிரம்புக்கு குட்டு வைத்த நட்பு நாடுகள்; எங்கள கேட்டா போர் தொடுத்தீங்க என கேள்வி!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!



Click it and Unblock the Notifications

