இந்தியாவின் மிக முக்கியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஆயில் இந்தியா மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது.
இந்தச் சைபர் தாக்குதலில் ஆயில் இந்தியாவின் பல சர்வர்கள் பாதிக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தியவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் அசாம் திப்ருகார் மாவட்டத்தில் இருக்கும் ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் செயல்பாடுகள் மொத்தமாக முடங்கியுள்ளது.
இந்நிலையில் சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் ஆயில் இந்தியாவிடம் சுமார் 57 கோடி ரூபாய் அளவிலான பணத்தைக் கேட்டு உள்ளனர்.
சைபர் தாக்குதல்
இந்தியாவில் கடந்த சில வருடத்தில் நடந்த பல்வேறு சைபர் தாக்குதலில் ஆயில் இந்தியா மீதானது மிகவும் பெரியதாகவும், கடுமையானதாகவும் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆயில் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் திரிதிவ் ஹசாரிகா கூறுகையில், "இது ஒரு ரேன்சம் வைரஸ், இது மிகவும் கடுமையான மற்றும் வலுவான வைரஸ் ஆக உள்ளது. இந்தச் சைபர் தாக்குதல் மூலம் சில சேவைகள் பாதித்துள்ளது, முழுமையாக மீட்க பல மணிநேரம் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
திரிதிவ் ஹசாரிகா
இந்தச் சைபர் தாக்குதலில் இருந்து மீண்டு வர ஆயில் இந்தியா அதிகாரிகள் மட்டும் அல்லாமல் வெளிப்புற நிபுணர்களின் உதவியையும் பெற்று வருகிறோம் என்று திரிதிவ் ஹசாரிகா கூறியுள்ளது. இதுவரையில் எவ்விதமான தகவல் திருட்டும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
புகார்
ஆயில் இந்திய இந்தச் சைபர் தாக்குதல் குறித்துக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் 2000 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
196 பிட்காயின்
மேலும் அசாம், திப்ருகர் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஸ்வேதாங்க் மிஸ்ரா கூறுகையில், ஹேக்கர்கள் 196 பிட்காயின்களை மீட்கும் தொகையாகக் கேட்டுள்ளனர், இது தோராயமாக 60 கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வர்கள் பாதிப்பு
தற்போது ஆயில் இந்தியா நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட சர்வர்கள் இணைப்பைத் தனியாக மற்ற சர்வர்களைப் பாதுகாப்புப் படுத்தியுள்ளதாகவும், ஆன்லைன் சர்வர்கள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளதாகவும், ஆப்லைன் சர்வர்கள் மட்டுமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications