கச்சா எண்ணெய் விலையானது தினசரி உற்பத்தியினை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பானது அறிவித்த நிலையில், கச்சா எண்ணெய் விலையானது ஏற்றத்தினைக் கண்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியா, வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரையில் தினசரி 5 லட்சம் பேரல்கள் மட்டும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒபெக் அறிவிப்பால் சரிவு
சர்வதேச அளவில் எரிபொருளுக்கான தேவையானது அதிகரித்து வரும் சூழலில், ஒபெக் நாடுகளின் இந்த முடிவானது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் பெரும் இழப்பினை காண வழிவகுக்கலாம் எனலாம்.
இந்த நிலையில் தான் ஒபெக்-ன் அறிவிப்பானது வெளியான நிலையில், இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பாளர்களான HPCL மற்றும் BPCL உள்ளிட்ட பங்குகள் தொடர்ந்து குறைந்து கண்டு வருகின்றன.
பங்குகள் சரிவு
இந்தியாவின் முக்கிய சுத்திகரிப்பாளர்களான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் 4- 5% வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றன.
இது மட்டும் அல்ல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குழுமத்தின் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையும் சரிவில் காணப்படுகின்றன.
கச்சா எண்ணெய் விலையால் அழுத்தம்
எனினும் பெட்ரோநெட் எல்.என்.ஜி மற்றும் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன. இது தவிர குஜராத் கேஸ் மற்றும் கெயில் பங்கு விலையும் சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் சந்தையானது மேலும் அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பி.எஸ் இ ஆயில் & கேஸ் குறியீடானது 126.16% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
இவ்வளவு சரிவா?
இந்த சரிவின் மத்தியில் HPCL பங்கானது 5% சரிவினைக் கண்டு, டாப் லூசராக உள்ளது. இதனையடுத்து பிபிசிஎல் பங்கானது உள்ளது. இது 4.2% எனும் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையானது மற்றும் இந்திய பிரசாத கேஸ் பங்கு விலையானது முறையே 2.09% மற்றும் 2.08% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இதே இந்தியன் ஆயில் பங்கும் சற்று குறைந்து காணப்படுகின்றது. ரிலையன்ஸ் பங்கு விலையானது சற்று பரவாயில்லை என்றாலும் சரிவிலேயே காணப்படுகின்றது.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
ஒபெக்கின் முடிவால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 81.23 டாலராக பேரலுக்கு அதிகரித்துள்ளது. இதே டபள்யூ டி ஐ கச்சா எண்ணெய் விலையானது 5% ஏற்றம் கண்டு, 79.6 டாலர் எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
தொடர்ந்து அமெரிக்காவில் பணவீக்கம் என்பது உச்சத்தில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பங்கு விலையில் தாக்கம் இருக்கலாம்
சீனாவில் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது மேற்கொண்டு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். இந்தியாவிலும் தேவையானது அதிகம் உள்ள சூழலில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையானது உச்சத்தில் காணப்படுகிறது. இனியும் அதிகரிக்கும்பட்சத்தில் மத்திய அரசு எண்ணெய் சுத்திகரிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. விலை வரம்பினை நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனங்களுக்கு எதிராக அமையலாம். இது பங்குகளுக்கு எதிராக அமையலாம்.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications