கோல்ட்மேன் சாச்ஸின் உலகளாவிய பொருட்கள் ஆராய்ச்சியின் இணைத் தலைவர் டான் ஸ்ட்ரூய்வன் ஈரானிய எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் பேரல்களாக குறைந்தால், அடுத்த ஆண்டுக்குள் ஒரு பேரலின் விலை சுமார் $20 உயரலாம் என்று கூறியுள்ளார். சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற முக்கிய உற்பத்தியாளர்கள் எண்ணெய் உற்பத்தி இழப்பை ஈடுகட்டினால், விலை உயர்வு பேரல் ஒன்றுக்கு $10-க்கும் குறைவாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது. ஆனாலும் எண்ணெய் சந்தை குறைந்த அளவிலான இடையூறுகளை சந்தித்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் சீனாவின் மந்தமான தேவை ஆகிய காரணங்களலால் இது ஏற்பட்டது.

இருப்பினும், சமீபத்திய நிகழ்வுகள் சந்தை விலையை மாற்றியுள்ள்ளன. இரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை மூன்று நாட்களில் லாபம் அடைந்துள்ளது. ஆனால் இனி வரும் நாட்களில் எண்ணெய் விநியோகத்திற்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் சந்தையில் முக்கிய உற்பத்தியாளரான இரான், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்கிறது. இஸ்ரேல் இரானின் எண்ணெய் உள்கட்டமைப்பை குறிவைத்தால், உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதத்திற்கு ஆபத்து ஏற்படலாம். அதேப்போல ஆய்வாளர்கள் குறிப்பாக கார்க் தீவு குறித்து கவலை கொண்டுள்ளனர், இது இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கு பொறுப்பாகும்.
ஈரானிய எண்ணெய் ஆலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஏற்படும் சாத்தியமான தாக்கங்கள் குறித்து அமெரிக்கா விவாதித்து வருவதாக ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில் கூறியிருந்தார். அவரது கருத்துக்கள் மூலம் எண்ணெய் விலை உயரலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புதனன்று வெளியான ஒரு செய்திக் குறிப்பில், ஃபிட்ச் சொல்யூஷன்ஸின் பிஎம்ஐ, ஒரு முழு அளவிலான போர் வெடித்தால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $100-ஐத் தாண்டும், ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $150 அல்லது அதற்கும் அதிகமாக உயரும் என்று தெரிவித்துள்ளது.
சில ஆய்வாளர்கள் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர்கள் (OPEC+) இரானின் ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறின் தாக்கத்தை ஈடுசெய்ய போதுமான திறன் கொண்டுள்ளதாக நம்பினாலும், உலகளாவிய எண்ணெய் உற்பத்தி பெரும்பாலும் மத்திய கிழக்கில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அதிகமாக உள்ளது. இது மோதல் அதிகரித்தால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications