பெங்களூரு: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஓசூரில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவி மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.
ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பவிஷ் அகர்வால் செயல்பட்டு வருகிறார். ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் தான் அரவிந்த் . கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஓலா நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்த அரவிந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

அரவிந்தின் இந்த திடீர் முடிவு குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணி சார்ந்த அழுத்தமே இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகப்பட்ட குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் அரவிந்தின் வீட்டிலும் அறையிலும் ஆய்வு நடத்திய போது அவர் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்தது.
28 பக்கம் கொண்ட அந்த தற்கொலை கடிதத்தில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக தன்னுடைய இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பதை அரவிந்த் எழுதி வைத்திருக்கிறாராம். ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் , பொறியியல் பிரிவு தலைமை அதிகாரி சுப்ரத்குமார் தாஸ் ஆகியோர் தான் காரணம் என குறிப்பிட்டு இருக்கிறார் . தனக்கான சம்பளப் பணத்தை முறையாக வழங்கவில்லை , அவர்கள் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர் என எழுதி வைத்திருக்காராம்.
பணி அழுத்தம் மற்றும் இவர்களின் தொலையை எதிர்க்க முடியாத காரணத்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனை கைப்பற்றிய காவல்துறையினர் ஓலா அலுவலகத்துக்கும் சென்று விசாரணை நடத்தினர். இதனை அடுத்து இந்த தற்கொலை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதில் ஓலா தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் மற்றும் பொறியியல் பிரிவு தலைமை அதிகாரி சுப்ரத்குமார் தாஸ் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே அரவிந்த் தற்கொலை செய்து கொண்ட அடுத்த சில தினங்களிலேயே ஓலா நிறுவனம் அவருடைய வங்கி கணக்கில் 17.46 லட்சம் ரூபாய் வரவு வைத்திருக்கிறது. ஒரு வேளை ஓலா நிறுவனம் பணம் கொடுத்து இந்த பிரச்சினையை தீர்க்க முற்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஓலா நிறுவனம் வழக்கு விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே பவிஷ் அகர்வால் சார்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என்றும் வழக்கு விசாரணையில் இருந்தும், முதல் தகவல் அறிக்கையில் இருந்தும் பெயரை நீக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி முகமது நவாஸ் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் பவிஷ் அகர்வால் உள்ளிட்டோரை தொந்தரவு செய்ய கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications