இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஓலா, ஆன்லைன் டாக்சி சேவை துறையில் இருந்து ஆட்டோமொபைல் துறைக்குள் வந்து இன்று பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக நிற்கிறது. அயன் படத்தில் வருவது போல.. எல்லாம் டெக்னாலஜி, பையன் புடிச்சிட்டான் என பாவிஷ் அகர்வால்-ஐ இந்திய ஆட்டோமொபைல் துறை வியந்து பார்க்கிறது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பை அதிகரிக்க மிக முக்கிய தடையாக இருப்பது வாகனங்களுக்கான பேட்டரி தான். தற்போதும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இப்படியிருக்கும் வேளையில் இந்த நிலையை மாற்றவும், ஓலா தனது எலக்ட்ரிக் கார் கனவை அடையவும் பேட்டரி தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது.

ஓலாவின் புதிய பேட்டரி தொழிற்சாலை தற்போது கிருஷ்ணகிரியில் இருக்கும் ஸ்கூட்டர் தொழிற்சாலைக்கு அருகிலேயே அமைக்கப்பட உள்ளது. ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது டிவிட்டரில் பேட்டரி தொழிற்சாலையான ஓலா ஜிகாபேக்ட்ரியின் முதல் தூண் நிறுவப்பட்ட போது செய்யப்பட்ட பூஜை முதல் தூண் நிறுவும் அசத்தலான டிரோன் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
இது மட்டும் அல்லாமல் ஓலா ஜிகா பேக்ட்ரியின் பணியாற்றும் அணி குளோபல் EV துறையின் இந்தியாவை முக்கிய ஹப் ஆக மாற்ற போகிறது என்பது பெருமையாக உள்ளதாகவும் டிவிட்டரில் #endICEAge என்ற முக்கிய ஹேஷ்டேக் உடன் முடித்தார்.

இந்த ஓலா ஜிகா பேக்ட்ரி சுமார் 115 ஏக்கரில் அமைய உள்ளது, 2024 ஆம் ஆண்டுக்குள் பேட்டரி உற்பத்தி பணிகள் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்தியாவின் மிகப்பெரிய செல் பேக்டரியாக இருக்கும் என தெரிகிறது. ஓலா கிருஷ்ணகிரியில் சுமார் 100 ஜிகாவாட் சக்தி கொண்ட ஜிகாபேக்டரியை உருவாக்க திட்டமிட்டு உள்ள நிலையில் இந்த 115 ஏக்கரில் ஆரம்ப கட்டமாக 5 ஜிகாவாட் முதல் துவங்கப்பட்டு அதன் பின் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஓலா இந்த புதிய ஜிகாபேக்டரி மூலம் மற்றொரு சாதனையை படைக்க உள்ளது, அதாவது மேகமாக கட்டப்படும் செல் பேக்டரி ஆக இது இருக்கும் என்றும் உற்பத்தி துறையில் புதிய மாற்றத்தை இதன் மூலம் காட்டவும் உள்ளதாக ஓலா நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் கார் உருவாக்குவதை முக்கிய இலக்காக கொண்டு இருக்கும் வேளையில் இதை சாத்தியமாக்க பெங்களூரில் மிகப்பெரிய மற்றும் அதிநவீன cell R&D சென்டரை ஓலா அமைந்துள்ளது. இங்கிருந்து தான் ஓலா-வின் தொழில்நுட்ப அடிப்படையிலான வளர்ச்சி மேம்பட உள்ளது.

ஓலா நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஓலா எலக்ட்ரிக் இரு சக்கரம், எலக்ட்ரிக் 4 சக்கரம், பேட்டரி ஆகியவை தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளது.
இது மட்டும் அல்லாமல் இந்த ஒப்பந்தம் வாயிலாக ஓலா, தமிழ்நாட்டில் EV ஹப் அமைக்கும். கிருஷ்ணகிரியில் ஒரே இடத்தில் மேம்பட்ட செல் மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி வசதிகள் முதல் விற்பனையாளர் மற்றும் சப்ளையர் பூங்காக்கள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஒட்டுமொத்த எகோசிஸ்டத்தை ஒரே இடத்தில் அமைக்க உறுதி அளித்துள்ளது.
இதன் மூலம் அடுத்த 40 வருடத்திற்கு ஓலா நிறுவனத்தின் உற்பத்தி தலைநகரமாக கிருஷ்ணகிரியும், தொழில்நுட்ப தலைநகரமாக பெங்களூர் இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications