சேவையை திடீரென நிறுத்திய ஓலா.. என்ன காரணம்..?

டெல்லி: ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவையில் பிரபல நிறுவனமான ஓலா, இனி இந்தியாவில் சேவை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் பொருட்டு வெளிநாடுகளில் ஏப்ரல் மாதத்துடன் சேவைகளை நிறுத்திக் கொள்வதாக மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை செயலி மூலம் பதிவு செய்து பயன்படுத்த வழி வகை செய்த நிறுவனம் ஓலா. இந்தியாவில் வாடகை வாகன சேவையில் முன்னணியில் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டில் பிரிட்டன் , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கும் தங்களின் சேவையை விரிவுப்படுத்தியது. இந்த நிலையில் ஓலா நிறுவனம் அவற்றை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது.

சேவையை திடீரென நிறுத்திய ஓலா.. என்ன காரணம்..?

இந்தியாவில் தங்களுடைய நிறுவன செயல்பாடுகளை அதிகரிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் தங்கள் நிறுவனத்தின் சேவைகளை நிறுத்து இருப்பதாக ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் ஏப்ரல் மாத இறுதிக்குள் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வழங்கி வந்த வாடகை வாகன சேவைகளை நிறுத்து போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் ஏப்ரலுடன் தங்கள் சேவையை நிறுத்தப் போவதாக தகவல் அளித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் ஓலா வாடகை செயலி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ஓட்டுநர்களுக்கும் இது தொடர்பான தகவல்களை தெரிவித்து வருவதாக ஓலா நிறுவனம் கூறியுள்ளது.

கூடிய விரைவில் ஓலா நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்காக ஐபிஓ வெளியிட வெளியிட உள்ளது. இதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வரும் ஓலா நிறுவனம், ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அதே வேளையில் மின்சார வாகனம் தயாரிப்பிலும் , ஏஐ தொழில்நுட்பத்திலும் ஓலா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை வாய்ப்புகளையும், மின்சார வாகனங்களை கொண்ட வாடகை சேவைகளுக்கான வாய்ப்புகளையும் பயன்படுத்தி நிறுவனத்தை விரிவுபடுத்த ஓலா நிறுவனம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஓலா நிறுவனம், தனது துணை நிறுவனமான ஓலா ஸ்கூட்டரிடம் இருந்து 8,000 மின்சார இருசக்கர வாகனங்களை வாங்கி இருக்கிறது.இதன் மூலம் உள்நாட்டில் பைக் சேவைகளில் மின்சார வாகனங்களை ஈடுபடுத்துவதற்கான பணிகளில் ஓலா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

எனவே வெளிநாடுகளில் கவனம் செலுத்தி இந்திய சந்தையை விட்டு விடக் கூடாது என ஓலா நிறுவனம் கருதுகிறது. எனவே, முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விரைவில் ஐபிஓ அறிவிப்பு வெளியிட உள்ளது. அதேபோல ஓலா கேப்ஸும் கூடிய விரைவில் ஐபிஓ வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மின்சார வாகனங்கள் மீது கவனத்தை செலுத்த இருப்பதாக இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஹேமந்த் பாக்சி கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+