கொரோனா தொற்றுக்குப் பின்பு உலக நாடுகளில் பல மாற்றங்கள் நடந்துள்ளது, குறிப்பாக நிறுவனங்களில் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் முறை, ஹைப்ரிட் மாடல், வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அலுவலகம், 50 சதவீத ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதும்.. இப்படி நிறுவனங்கள் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஐடி, டெக் அல்லது புதிதாக உருவாகிய நிறுவனத்தில் தான் அதிகம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போ மற்ற நிறுவனங்கள்...?
மாற்றம் மட்டுமே மாறாதது
வர்த்தகச் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள இத்தகைய புதிய மாற்றங்களை நீண்ட காலமாக இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பல நிறுவனங்கள் உணர்ந்துள்ளது.
புதிய வேலைவாய்ப்பு முறை
இதன் படி இந்தியாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் டெக் துறை அல்லாத நிறுவனங்களான சியாட், டாடா ஸ்டீல், ஐடிசி, மஹிந்திரா பைனான்ஸ், தெராமேக்ஸ், போர்ப்ஸ் மார்ஷெல் ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு, 2-3 நாள் வொர்க் பர்ம் ஹோம், நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் முறை, எங்கு இருந்து வேண்டுமானாலும் பணியாற்றும் முறை work-from-anywhere (WFA) ஆகியவற்றை அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளது.
ஹைப்ரிட் கலாச்சாரம்
மேலும் இந்த ஹைப்ரிட் கலாச்சாரத்தை இந்திய நிறுவனங்கள் டெக் பிரிவுகளுக்கு மட்டும் அல்லாமல் நிதி துறை, மனித வள பிரிவு, சட்ட பிரிவு, கணக்கியல் ஆகிய பிரிவுகளுக்கும் கொண்டு வந்துள்ளது கூடுதல் சிறப்பு.
ஊழியர்கள் வெளியேற்றம்
தற்போது டிஜிட்டல் சேவை நிறுவனங்களில், டெக் பிரிவுகளைத் தாண்டி பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும் நிலையில் பெரு நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. இதைக் கட்டுப்படுத்தவே பழைய நிறுவனங்களில் ஹைப்ரிட் மாடல் கொண்டு வரப்பட்டுள்ளது.
செலவுகள்
இதேபோல் இந்த ஹைப்ரிட் மாடல் மூலம் நிறுவனத்திற்குப் பல வகையில் செலவுகள் குறைகிறது என்பதால் சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரும் இந்த ஹைப்ரிட் மாடலை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications