2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பல முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக புதிய வருமான வரிமுறையின் கீழ் அடிப்படை வருமான வரி வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனால் பலரும் எந்த விதமான வரிச் சலுகைகளும் இல்லை என்றாலும் வருமான வரி செலுத்தாமல் இருக்கலாம் என்பதற்காக புதிய வருமான வரியைத் தேர்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது.
ஆனாலும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அது என்னவென்றால் புதிய வரி முறையில் வீட்டு வாடகைப்படி, பிரிவு 80C, 80D-இன் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகள் கிடையாது. அதோடு வீட்டுக் கடன் வட்டிக்கு கிடைக்கும் வரிச் சலுகையையும் பெற முடியாது.

பழைய வரி முறையின் முக்கியத்துவம்: 2025-ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு எந்த வரி முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது? என்ற குழப்பத்தில் பல வரி செலுத்துவோர் குழம்பியுள்ளனர்.
இது குறித்து சார்டர்ட் அக்கவுண்டன் சுரேஷ் சுரானா கூறுகையில், பழைய மற்றும் புதிய வரி முறையின் கீழ் முடிவெடுக்கும் போது வீட்டு கடன் பெற்றிருப்பவர்கள் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது பழைய வரி முறையில் சொந்தமாக குடியிருக்கும் வீட்டின் கடனுக்கான வட்டிக்கு பிரிவு 24(b)-இன் கீழ் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.
வாடகைக்கு விடப்பட்ட அல்லது வாடகைக்கு விடப்பட வேண்டிய வீடாக இருந்தால் இந்த வரம்பு கிடையாது. மேலும் 80C-இன் கீழ் வீட்டு கடனின் அசல் தொகைக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். கூடுதலாக முதல் முறையாக வீடு வாங்கி இருந்தால் வீட்டின் மதிப்பு மற்றும் கடனைப் பொறுத்து பிரிவுகள் 80EE அல்லது 80EEA இன் கீழ் கூடுதல் வரிச் விலக்குகளை பெறவும் வாய்ப்புள்ளது.
புதிய வரி விதிப்பு முறையின் முக்கியத்துவம்: பழைய வரி முறைக்கு நேர் மாறாக புதிய வரி முறையில் குறைந்த வரி விகிதங்கள் விதிக்கப்படுகிறது. ஆனால் வீட்டுக் கடன் சலுகைகள் போன்ற முக்கியமான வரிச் சலுகைகள் இதற்கு கிடையாது. எனவே நீங்கள் இன்னும் வீட்டுக்கு கடன் கட்டிக் கொண்டிருந்தால், அதுவும் குறிப்பாக கடனின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தால் பழைய வரி முறை உங்களுக்கு அதிக சேமிப்பை வழங்கும். வீட்டுக் கடனை முழுமையாக செலுத்தியவர்கள் அல்லது வீட்டுக் கடன் சலுகைகளை கோராதவர்கள் புதிய வரி முறையில் குறைந்த வரி விகிதங்களைப் பயன்படுத்தி பயனடையலாம்.
புதிய வரி முறையின் கீழ் வரி தள்ளுபடி உயர்வு: 2025-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் வந்த முக்கியமான மாற்றங்களில் இதுவும் ஒன்று. பிரிவு 87A - ன் கீழ் வரி தள்ளுபடி 25,000 ரூபாயிலிருந்து ரூ. 60,000-ஆக உயர்த்தப்பட்டது. நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களில் இருக்கும் வரி செலுத்துவோர் இந்த புதிய வரி முறையின் கீழ் இந்தச் சலுகையைப் பெறலாம்.
பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே தேர்வு செய்யும் போது உங்களுடைய வீட்டுக் கடன், வருமான நிலை, முதலீடு போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தேர்வு செய்யப்பட வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications