டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் அறிக்கையானது வெளியிடப்பட்டது. ஏனெனில் கடந்த ஆண்டு கொரோனாவின் மூலம் தாக்கப்பட்ட பின்பு, பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டது.
இதன் காரணமாக பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும், தொழிற்துறைகளுக்கான பல அறிவிப்புகளும் வரும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது அந்த நம்பிக்கையானது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியுள்ளது. பரவி வரும் இரண்டாம் கட்ட பரவலானது அந்த நம்பிக்கையை தகர்த்துக் கொண்டுள்ளது.
மதிப்பிட முடியா அளவு தாக்கம்
ஏனெனில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் என்பது மதிப்பிட முடியா அளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக பலி எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்லும் இந்த நிலையில், பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். தொழிற்துறைகள் பலவும் முடங்கியுள்ளன. அதிலும் பல மாநிலங்களில் தாக்கத்தினை குறைக்கும் விதமாக முழு லாக்டவுன் அமல்படுத்தபட்டுள்ளது. இதனால் இன்னும் பொருளாதாரம் பின்னடைவை நோக்கி செல்லலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
பட்ஜெட் இலக்கு
இதற்கிடையில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இன்மை, உள்கட்டமைப்பு வசதிகள், மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், கடந்த பட்ஜெட் அறிக்கையில் உள்கட்டமைப்பு மற்றும் ஹெல்த்கேர் துறையினை மீட்டெடுப்பது தான் இலக்காகவும் இருந்தது. ஆனால் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இது நிறைவேறுமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.
வருவாய் முடக்கம்
ஏனெனில் கொரோனாவின் காரணமாக நாடே முடங்கிய நிலையில், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முடங்கியது. அதோடு மேற்கண்ட மூலதன முதலீடுகளுக்கு, சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம் கிடைக்கும் நிதியினை பயன்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதுவும் முடியாத நிலையில், புதிய முதலீடுகள் கேள்விக்குறியாக உள்ளன.
100 ஆண்டுகளில் இல்லாத பட்ஜெட்
இதுபோன்ற வரவு செலவு திட்டத்தினை 100 ஆண்டுகளில் இந்தியா பார்க்காது என்றும் அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. ஏனெனில் அந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் நுகர்வோர் தேவையானது பலமாக அதிகரித்தது. கடந்த ஆண்டில் துவணடு போன பொருளாதாரமும் அப்போது மீண்டு வர தொடங்கியது.
கொரோனாவுடன் போராட்டம்
ஆனால் தற்போது இந்தியா அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக, இரண்டாவது நாடாக கொரோனா வைரஸ் உடன் போராடி வருகின்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் கொரோனா புதிய வழக்குகளை பதிவு செய்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையானது நாள் ஒன்று 4,000 ஆயிரத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது. ஆக மொத்தத்தில் பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட பெரும்பாலான கணிப்புகள் தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளன.
கேள்விக்குறியான பொருளாதாரம்
இதனால் தற்போது முதலீடுகளை இந்த நெருக்கடியான நிலையானது கேள்விக் குறியாக்கியுள்ளது. இதற்கிடையில் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்புகளை மீண்டும் மாற்றியமைத்து வருகின்றனர். மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 13.7%ல் இருந்து 9.3% ஆக குறைத்துள்ளது.
தாமதமாகி வரும் தனியார்மய நடவடிக்கை
தடுப்பூசி செலவினங்களுக்காக அரசு பட்ஜெட்டில் கணிசமான தொகையை ஒதுக்கியது. ஆனால் இரண்டாம் கட்ட பரவலுக்காக எந்த நிதியினையும் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் அரசுகள் தற்போது பல செலவினங்களை குறைக்க வேண்டியிருக்கும். தற்போது கொரோனா பரவல் காரணமாக தனியார்மய நடவடிக்கையும் தாமதமாகி வருகின்றது.
பங்கு விற்பனை
எப்படியிருப்பினும் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சில நிறுவனங்களின் பங்கினை விற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஏர் இந்தியா உள்ளிட்ட பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இரு வங்கிகள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications