பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பே வெங்காயம் விலையானது சதமடிக்க தொடங்கியுள்ளது.
இதற்கு முக்கிய முக்கிய காரணம் வரத்து குறைவே என்கின்றனர் சிறு வியாபாரிகள்.
அதோடு வெங்காயம் விலை மட்டும் அல்ல, உருளைக்கிழங்கு விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
காய்கறிகள் விலை அதிகரிப்பு
கடந்த மாதம் புரட்டாசி என்பதால் காய்கறிகள் அதிக அளவில் விற்பனையானது. இதனால் காய்கறிகளின் விலை அதிகமாகவே இருந்து வந்தது. இதற்கிடையே புரட்டாசி மாதம் நிறைவுற்ற நிலையில், நவராத்திரி தொடங்கி விட்டது. ஆக தற்போது நவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் சைவ உணவையே சாப்பிடுவார்கள் என்பதால் மீண்டும் காய்கறி விலையும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. காய்கறிகளின் தேவையும் அதிகரித்து விட்டது, ஆனால் அதே நேரம் வரத்து குறைவால் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வரத்து குறைவு & சேதாரம் அதிகம்
ஒரு புறம் வரத்து குறைந்தாலும், மறுபுறம் சேதராமும் அதிகரித்துள்ளது. அதாவது மழைக்காலம் என்பதால் வெங்காயம் அழுகலும் அதிகரித்துள்ளது. ஆக அந்த நஷ்டத்தினையும் ஈடுகட்ட, சிறு வியாபாரிகள் விலையை சற்று கூடுதலாக வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெங்காயம் விலை
வெங்காயம் விலையை பொறுத்தவரையில் சில இடங்களில் கிலோ 100 ரூபாய் என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில் கிலோவுக்கு 20 - 30 ரூபாய் அதிகரித்துள்ளது. இதே மொத்த வெங்காயத்தின் விலை 45 - 55 ரூபாயாக உள்ளது.
வெங்காய உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான மழைப் பொழிவால் வெங்காய உற்பத்தியில் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காய வரத்து குறைவாக உள்ளது.
வெங்காயம் விலை மும்மடங்கு அதிகம்
குறிப்பாக தென்னிந்திய நகரங்களில் வெங்காயம் விலை கடந்த சில வாரங்களில் மட்டும் மும்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், கோயமுத்தூர், சேலம், சென்னை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் முதல் தர சின்ன வெங்காயம் சதமடித்துள்ளது.
உருளைக்கிழங்கு விலை அதிகரிப்பு
உருளைக்கிழங்கின் விலையானது கடந்த 10 தினங்களுக்கு முன்பு 25 - 40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இது தற்போது 40 - 50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாதரணமாக அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே, கர்நாடாகவிற்கு சப்ளை ஆரம்பித்து விடும். ஆனால் தற்போது பருவமில்லாத மழை காரணமாக இது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உருளைகிழங்கின் இருப்பும் குறைவாகவே உள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
விலை இன்னும் அதிகரிக்கும்
பண்டிகை சீசனை முன்னிட்டு வெங்காயத்துக்கான தேவை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்பதால் விலையேற்றம் இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதே சதமடித்துள்ள வெங்காயத்தின் விலையானது இன்னும் விழாக்காலத்தில் தேவை அதிகரிக்கும் போது எவ்வளவு அதிகரிக்குமோ தெரியவில்லை. அதற்குள் போதுமான வெங்காயம் இறக்குமதி செய்யப்படுமா? அரசின் நடவடிக்கை கைகொடுக்குமா? பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications