கடந்த இரண்டு வாரங்களில் வெங்காய விலை 30-50% வரை உயர்ந்துள்ளது. வெங்காயம் இந்திய உணவில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை உணவில் ஒரு அங்கமாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் சந்தையில் வரத்து குறைந்துள்ளதுடன், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு விலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்திவிடும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் தங்களது கையிருப்பை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

நாசிக் லாசல்காவோ மண்டியில் திங்கட்கிழமை அன்று மொத்த விலை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.26 ஆக இருந்தது, இது மே 25ம் தேதி இருந்த ரூ.17 உடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய உயர்வாகும்.
மொத்த விலை விற்பனையில் சிறந்த தரம் வாய்ந்த வெங்காயத்தின் வர்த்தக அளவில் சிறிய பங்கு வகிக்கிறது என்றாலும், இதன் விலை கிலோவுக்கு ரூ.30 ஐ தாண்டி கூடுதல் அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும் இது அனைத்தும் மொத்த விலை விற்பனை விலை, ரீடைல் சந்தையில் வெங்காயம் விலை 50 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்படுகிறது.
வெங்காயத்தின் விலை உயர்வு அதை வாங்கும் மக்களுக்கு அதிகப்படியான அதிர்ச்சியைக் கொடுத்தாலும், இதை விளைவிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. பொதுவாகவே விவசாயிகளிடம் இருந்து வாங்கும் காய்கறிகள் பல கைகள் மாறி ரீடைல் சந்தைக்கு வரும்போது இதன் விலை கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிக விலைக்குத் தான் விற்கப்படுகிறது.
ஆனால் இதுபோன்று சந்தையில் சப்ளை - டிமாண்ட் பிரச்சனை வரும் போது ஏற்படும் விலை உயர்வு தான் விவசாயிகளை மகிழ்விக்கிறது. வெங்காய விலை உயர்வுக்கு முக்கிய காரணமும், தேவைக்கும் வரத்துக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு தான்.
ஜூன் மாதம் முதல் சந்தைகளுக்கு வரும் வெங்காயம், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வைத்திருக்கும் கையிருப்பில் இருந்து வருபவை. 2023-24 (ரபி) பருவ பயிரில் எதிர்பார்க்கப்படும் குறைவு காரணமாக விலை உயரும் என எதிர்பார்த்து, விவசாயிகள் தங்கள் கையிருப்பில் இருந்து மெதுவாகவே விற்பனை செய்கின்றனர்.
40% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி மந்தமாக இருந்தாலும், வரும் ஜூன் 17ம் தேதி பக்ரித் பண்டிகை முன்னிட்டு உள்நாட்டு தேவை வலுவாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
"மகாராஷ்டிராவின் வெங்காயத்திற்கு, குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து கடும் தேவை உள்ளது" என்று நாசிக், மகாராஷ்டிராவைச் சேர்ந்த வெங்காய வியாபாரி விக்ராஸ் சிங் கூறினார்.
விலை உயர்வு சாமானிய மக்களைப் பாதிக்கும் என்பதால், மத்திய அரசு விரைவில் தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நுகர்வோர் வலியுறுத்துகின்றனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications