பண்டிகை காலம் முடிந்ததிலிருந்து வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவின் முன்னணி சந்தைகளிலும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. நம் நாட்டில் சமைக்கப்படும் சைவ மற்றும் அசைவ உணவுகளில் முதன்மை பொருளாக இருப்பது வெங்காயம் தான். வெங்காயம் இல்லாத உணவு வகைகள் மிகவும் குறைவே. பெருவாரியாக வெங்காயம் கொள்முதல் செய்யப்படும் இடங்களில் மழையின் காரணமாக வரத்து குறைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் காரிஃப் பயிர் வரத்து தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக இனிவரும் நாட்களில் வெங்காய விலை குறையும் என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். தற்போது வெங்காயத்தின் அகில இந்திய சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு 54 ரூபாயாக உள்ளது. உயர் விலையில் விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தை டெல்லி மற்றும் பெரு நகரங்களிலும் ரூ.35 என்ற விலையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அரசாங்கத்திடம் 4.5 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் 15 லட்சம் டன் இன்று வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெங்காய தட்டுபாட்டைக் குறைக்க இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ரயில் மூலம் வெங்காயம் கொண்டு செல்லப்படுகிறது. வெங்காய விலை சீராகும் வரை ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி பிற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சென்னை, குவாஹத்தி போன்ற பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களில் 4850 டன் வெங்காயம் ரயில்வே மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 3,170 டன் வெங்காயம் டெல்லி சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெங்காயம் 34 சதவீதம் அதிகம் பயிரிடப்பட்டாலும், மழையின் காரணமாக இந்த அதிகரிப்புக்கும் எந்த பலனும் இல்லாமல் போயுள்ளது. அதேபோல காய்கறிகளின் விலை தொடர்ந்து உணவுப் பொருள் பணவீக்கத்தை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் வெளியான கிரிசில் அறிக்கையிலும் வெஜ் மீல்ஸ்-இன் விலை செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாதம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் காய்கறிகள் மற்றும் பருப்பு விலை ஏற்றம்.
வெங்காய வலையின் இந்த அதிகரிப்பு இந்தியக் குடும்பங்கள் மட்டும் இன்றி உணவகங்களையும் பாதித்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications