பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜனவரி 1 முதல் வெங்காயத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதன் எதிரொலியாக நாசிக் மொத்த விலை விற்பனை மண்டியில் ஒரு குவின்டால் வெங்காயம் விலை சுமார் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களாக இருக்கும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது, அதுவும் மத்திய அரசு ஏற்றுமதிக்கு ஒப்பதல் அளித்த பின்பு ஏற்பட்டு உள்ள விலை உயர்வு நாட்டு மக்களின் உணவுப் பொருட்கள் மீதான செலவுகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி
மத்திய வெளிநாட்டு வர்த்தகப் பொதுத்துறை (DGFT) இந்தியாவில் வெங்காய விலை குறைந்துள்ளதன் வாயிலாகத் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் இருந்து இனி அனைத்து வகையான வெங்காய வகைகளை எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஜனவரி 1ஆம் முதல் அனுமதி அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தது.
மொத்த விலை சந்தை
இதன் வாயலாக அடுத்த இரண்டு நாடுகள் நாசிக் லசால்கவுன் மொத்த விற்பனை சந்தையில் ஒரு குவின்டால் வெங்காயம் 1,951 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெறும் இரண்டு நாட்களில் இதன் விலை சுமார் 2,500 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
தடாலடி உயர்வு
செவ்வாய்க்கிழமை இதன் அளவு 2,400 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் படி கடந்த 2 நாட்களில் வெங்காயத்தின் விலை சுமார் 28 சதவீதம் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ரீடைல் சந்தை விலை
மொத்த விலை சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு ரீடைல் சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை முதல் ஒரு கிலோ வெங்காயம் 35 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை 50 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதிக்குத் தடை
செப்டம்பர் மாதம் இந்திய ரீடைல் சந்தையில் வெங்காயத்தின் விலை 100 ரூபாயைக் கடந்த நிலையில் மத்திய அரசு விலையைக் கட்டுப்படுத்த ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. தற்போது விலை அதிகளவில் குறைந்ததைத் தொடர்ந்து தற்போது ஏற்றுமதிக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications