சென்னை: கிரெடிட் கார்டுகளை வாங்கவே முன்பெல்லாம் பயப்பட்ட இந்திய மக்கள், இப்போது டெபிட் கார்டுகள் பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டு, டீ கடையில் கூட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர். இது இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றமாகும். மேலும் சேமிப்பையும், சிக்கனத்தையும் தலையாய மந்திரமாக கொண்டு இருந்த மக்கள் இப்போது கடன்களை வாங்கி குவித்து வருகின்றனர்.
கிரெடிட் கார்டு பயன்பாடு இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மார்ச் 2024 இல், ஆன்லைன் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் முதன் முதலாக ரூ.1,04,081 கோடியைக் கடந்துள்ளது. அதாவது 31 நாளில் 1 லட்சம் கோடியை மக்கள் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தின் ரூ.86,390 கோடி ஒப்பிடும்போது 20% அதிகமாகும், இதேபோல் பிப்ரவரி 2024-ன் ரூ.94,774 கோடி உடன் ஒப்பிடும்போது 10% உயர்வாகும்.
இதேபோல் கடைகளில் (point-of-sale machines) செய்யப்படும் பரிவர்த்தனைகள் (ஆஃப்லைன்) மார்ச் 2024 இல் ரூ.60,378 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 19% அதிகமாகும்.கிரெடிட் கார்டிலும் ஆன்லைன் பயன்பாடு அதிகம்.
மக்கள் கடந்த சில வருடங்களாக அதிகளவிலான கடன் வாங்குவது உயர்ந்துள்ளது. வீட்டுக்கடன், வாகன கடன், தங்க நகை கடன் இல்லாமல் பாதுகாப்பற்ற கடன்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இது மக்களின் வருமானத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை உண்மையாக்கும் வகையில் மொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மார்ச் 2024 இல் ரூ.1,64,586 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டை விட 20% அதிகமாகும்.
கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரியில் முதன் முதலாக 10 கோடியைக் கடந்த கிரெடிட் கார்டுக்களின் எண்ணிக்கை, மார்ச் மாத இறுதியில் 10.2 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20% அதிகரிப்பு.
கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களைச் சந்தை பங்கீட்டைப் பார்க்கும்போது, நடப்பு நிதியாண்டின் இறுதியில் ஹெச்டிஎஃப்சி வங்கி 20.2% சந்தை பங்கைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ (18.5%), ஐசிஐசி வங்கி (16.6%), ஆக்சிஸ் வங்கி (14%), மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி (5.8%) ஆகியவை உள்ளன. டாப் 10 கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் 90% பங்கைக் கொண்டுள்ளன.
கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாகப் பரிவர்த்தனைகளின் அளவும் அதிகரித்து வருகிறது. மார்ச் 2024 இல், கடைகளில் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டை விட 28% உயர்ந்து 18 கோடியாக இருந்தது, அதே நேரத்தில் ஆன்லைன் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் 33% உயர்ந்து 16.4 கோடியாக இருந்தது.
இதேபோல் பரிவர்த்தனை எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து வருகிறது, இதற்கு முக்கியமான காரணம், வாடிக்கையாளர்கள் குறைந்த தொகை பரிவர்த்தனைகளை அதிகளவில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலுத்துகின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.
UPI நெட்வொர்க்கில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பதால் இந்த உயர்வு பதிவாகியிருக்கலாம். இதேவேளையில் டெபிட் கார்டு பயன்பாடு மார்ச் 2024ல் ஆப்லைனில் 30 சதவீதமும், ஆன்லைனில் 41 சதவீதமும் குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications