பட்ஜெட் 2023 இன் வெளியான அறிவிப்பின்படி ஆன்லைன் கேமிங் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு அதாவது வெற்றிப்பெற்ற பணத்திற்கு TDS பிடித்தம் ஜூலை 1,2023 க்கு பதிலாக ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதியன்று ஆன்லைன் கேம் வெற்றிகளின் முலம் பெறப்படும் தொகைக்கு 30% டிடிஎஸ் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு ஓரளவுவிற்கு நிம்மதி அளிப்பதாக தி டயலாக் நிறுவனத்தின் தலைமைப் பணியாளர் கிருத்தி சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த வரி விதிப்பானது வரவேற்கத்தகது எனவும், இதன் மூலம் சிறிய தொகையை முதலீடு செய்து பணத்தை இழக்கும் நபர்களின் எண்ணிக்கையை இது குறைக்கும் எனவும் கிருத்தி சிங் கூறியுள்ளார்.
ரூ.10,000 மேல் இருந்தால் டிடிஎஸ் விதிக்கப்படும்!
ஒரு நிதியாண்டில் ஆனலைன் கேமிங் மூலம் ரூ.10,000 மேல் வருமானம் ஈட்டினால் 30% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
உதரணமாக தனிநபர் ஒருவர் ரூ.1,000 இலவசமாக செலுத்தி ரூ.35,500 வென்றுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். பின்னர், ஆன்லைன் கேமிங் நிறுவனம் 35,500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயை அதிலிருந்து கழிக்கும். அதன்பின் இருக்கும் ரூ.34,500 க்கு 30% (ரூ.34,500-30%) டிடிஎஸ் வரி கணக்கிடப்படும். அதில் ரூ.10,350 டிடிஎஸ் தொகை அரசாங்கத்திற்கு டெபாசிட் செய்யப்படும் மற்றும் மீதமுள்ள ரூ.24,150 தனிநபர் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆன்லைன் கேமிங் வளர்ச்சி!
உண்மையான பணத்தை வழங்கும் ஆன்லைன் ரம்மி, போக்கர் மற்றும் பிற ஆன்லைன் கேம்கள் சமீபத்திய காலங்களில் அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆன்லைன் கேமிங் துறையில் மக்கள் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களைப் மூலம் ஆன்லைன் கேமிங்களை விளையாடு பணம் சம்பாத்தித்து வருகின்றனர்.
ஆன்லைன் கேமிங் வருமான வரி!
தற்போதைய வருமான வரிச் சட்டங்களின்படி, வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, 'பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்' என்ற தலைப்பின் கீழ் இதற்கு வரி விதிக்கப்படுகிறது.
சாமானியர்கள் பாதிப்பு குறையும்!
ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. இதில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள இளைஞர்கள் எப்படியாவது பணம் சம்பாதித்திட வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் குறைந்த பணத்தை முதலீடு செய்து விளையாடுகின்றனர்.
எளிதானது இல்லை
ஆனால் ஆன்லைன் கேமிங் மூலம் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை. ஒரு சிலரே குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை பெறுகின்றனர். அதை நம்பி பலரும் அதில் பணம் கட்டி விளையாடி தோற்றுப் போகின்றனர்.
அதனால பலர் மன உளைச்சலுக்கும் ஆளாகி தற்கொலை செய்து கொண்ட செய்திகளும் உண்டு. இந்த 30% வரி விதிப்பு மூலம் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications