சொந்தமாக தனி கரன்சி, தனி வங்கி.. அடேங்கப்பா..!! இந்தியாவில் இப்படியொருவர்..!

சுதந்திர இந்தியாவின் முதன் பில்லியனராக இருந்த மீர் ஓஸ்மான் அலி கான் ஆடம்பரத்தின் உச்சத்தில் வாழ்ந்தாலும் நிதித் துறையில் பெரிய புரட்சியே செய்துள்ளார்.

இதுவரையில் எந்தொரு பணக்காரரும் தனக்காகவும், தன் மக்களுக்காகவும் வங்கியை உருவாக்கியது இல்லை. ஆனால் மீர் ஓஸ்மான் அலி கான் ஹைதராபாத் மாகாணத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தனி வங்கியை உருவாக்கியது மட்டும் அல்லாமல் சொந்தமாக நாணயத்தையும் உருவாக்கினார்.

சொந்தமாக தனி கரன்சி, தனி வங்கி.. அடேங்கப்பா..!! இந்தியாவில் இப்படியொருவர்..!

இது மட்டும் அல்லாமல் 1941ல் மீர் ஓஸ்மான் அலி கான் சொந்தமாக ஒரு வங்கி கூட உருவாக்கினார் இதன் பெயர் Hyderabad State Bank. ஹைதராபாத் மாநிலத்தின் நாணயமான உஸ்மானியா சிக்கா (ஹைதராபாத் ரூபாய்) கொண்டு இவ்வங்கி நிர்வகம் செய்தது. இந்தியாவில் சொந்த நாணயத்தைக் கொண்ட ஒரே மாநிலம் ஹைதராபாத், மேலும் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆட்சியாளர் நாணயத்தை வெளியிட அனுமதிக்கப்பட்ட ஒரே மாநிலமாகும்.

Hyderabad State Bank பின்னாளில் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் பெயர் மாற்றம் செய்யப்பட்டு 2017ல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன் இணைக்கப்பட்டது. இதற்கு முன்பு Hyderabad State Bank 1953 ஆம் ஆண்டில், ராஜா பன்னலால் பிட்டி 1935 இல் நிறுவிய மெர்கன்டைல் ​​பேங்க் ஆஃப் ஹைதராபாத் உடன் இணைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி Hyderabad State Bank-யை அதன் முதல் துணை நிறுவனமாக எடுத்துக் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் (SBH) என்று பெயர் மாற்றியது. இந்திய ரிசர்வ் வங்கி துணை வங்கிகள் சட்டம் 1959 இல் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 1, 1959 அன்று, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத் மாநிலத்தில் இருக்கும் பிற வங்கிகள் எஸ்பிஐ-யின் துணை நிறுவனங்களாக மாறியது. இதன் பின்பு 31 மார்ச் 2017 அன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உடன் இணைக்கப்பட்டது.

சொந்தமாக தனி கரன்சி, தனி வங்கி.. அடேங்கப்பா..!! இந்தியாவில் இப்படியொருவர்..!

அக்டோபர் 1965 இல், சீன-இந்தியப் போரின் போது, ​​பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஹைதராபாத் வந்தார். அப்போது தேசியப் பாதுகாப்பு நிதிக்கு பங்களிக்குமாறு மீர் ஓஸ்மான் அலி கான் ஹைதராபாத்-ன் கடைசி நிஜாம்-யிடம் கோரிக்கை வைத்தார்.

உடனே நிஜாம் சுமார் ஐந்து டன் (5,000 கிலோ) தங்கத்தை இந்திய இராணுவத்திற்கு வழங்கினார். சர்வதேச சந்தையில் இன்றைய தங்கத்தின் விலையின் அடிப்படையில், இந்த நன்கொடை ரூ.1,500 கோடி ரூபாயாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+