இந்தியாவில் பெரும் பணக்காரர் என்ற உடன் நம் நினைவுக்கு முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கௌதம் அதானி, ஷிவ் நாடார், லட்சுமி மிட்டல் இன்னும் சிலரின் பெயர் நினைவுக்கு வரும், ஆனால் யாரிடமும் இல்லாத பல காஸ்ட்லியான விஷயங்கள் இந்த பணக்காரரிடம் உள்ளது. இவர் மும்பையிலோ, டெல்லியிலோ அல்லது வெளிநாட்டிலோ இல்லை, சென்னையில் இருந்து ஒரு 630 கிலோமீட்டர் தொலைவில் ஹைதராபாத்தில் தான் வாழ்ந்துள்ளார்.
1886 ஆம் ஆண்டு ஹைதராபாத்-ல் பிறந்த மீர் ஓஸ்மான் அலி கான் தான் சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனர் ஆவார். ஹைதராபாத் மாகாணத்தின் கடைசி நிஜாம் மீர் ஓஸ்மான் அலி கான், பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாக விளங்கியது இந்த மாகாணம். 1911 முதல் 1948 வரையில் மீர் ஓஸ்மான் அலி கான் தான் ஹைதராபாத் மாகாணத்தை ஆண்டார்.

சுதந்திரத்திற்குப் பின்பு ஹைதராபாத் மாகாணம் பாகிஸ்தான் உடன் சேர்வதா அல்லது தனி நாடாக இந்தியாவுக்கு மத்தியில் இருப்பதா என் நிலை வரும் போதும், 1948ல் இந்தியாவுடன் இணைய முடிவு செய்தார் மீர் ஓஸ்மான் அலி கான். சுதந்திர இந்தியாவில் தனித்தனி மாகாணங்களாக இருந்த பல பகுதிகள் யாருடன் சேருவது என்பதில் பெரும் குழப்பத்தைச் சந்தித்தது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு 1940ல் மீர் ஓஸ்மான் அலி கான் அவர்களின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர், இன்றைய ரூபாய் மதிப்பில் 35.8 பில்லியன் டாலராகும். இது மட்டும் அல்லாமல் 22 பிப்ரவரி மாதம் 1937ல் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் மீர் ஓஸ்மான் அலி கான் இடம்பெற்றார்.
மீர் ஓஸ்மான் அலி கானின் செல்வத்தை ஒரு வரியில் விளக்க வேண்டுமெனில் இவர் 185 காரட் கொண்ட ஜேக்கப் வைரத்தை paperweight ஆக பயன்படுத்தினாராம். மீர் ஓஸ்மான் அலி கான் தனது ஆட்சி காலத்தில் ஹைதராபாத் மாகாணத்தில் பெரிய அளவில் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றார்.
இவருடைய ஆட்சி காலத்தில் தான் முறையான சாலை, ரயில்வே, மின்சாரம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. இது மட்டும் அல்லாமல் இந்தியாவின் முதல் ஏர்போர்ட் 1930ல் Begumpet Airport உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதல் விமான நிறுவனமான Deccan Airways-ஐ 1937ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கினார் மீர் ஓஸ்மான் அலி கான்.

இது மட்டும் அல்லாமல் மீர் ஓஸ்மான் அலி கான் மார்டன் ஹைதராபாத்-ன் வடிவமைப்பாளர் என அழைக்கப்படுவார், இவருடைய ஆட்சி காலத்தில் தான் உஸ்மானியா பல்கலைக்கழகம், ஹைதராபாத் உயர்நீதிமன்றம், ஜூபிலி ஹால், நிஜாமியா கண்காணிப்பகம், மொஸாம் ஜாஹி மார்க்கெட், காச்சிகுடா ரயில் நிலையம், அசாஃபியா நூலகம், டவுன் ஹால், ஹைதராபாத் அருங்காட்சியகம், உஸ்மானியா பொது மருத்துவமனை, நிஜாமியா மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டது.
1947 ஆம் ஆண்டில், நிஜாம் தனது திருமணத்தின் போது வருங்கால ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு ஒரு தலைப்பாகை மற்றும் நெக்லஸ் உள்ளிட்ட வைர நகைகளை பரிசாக வழங்கினார். ப்ரோச்ஸ் மற்றும் நெக்லஸ் ராணி இறக்கும் வரை அணிந்திருந்தார், மேலும் இந்த நெக்லஸ் ஹைதராபாத் நிஜாம் நெக்லஸ் என்று அழைக்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications