டெக் ஊழியர்கள் பணி நீக்கம்.. அதிக ஊதியம் பெரும் நபர்கள் தான் இலக்கு..!

அமெரிக்கா: பிரபல ஐடி நிறுவனமான ஒராக்கிள் (Oracle Corporation) தங்களுடைய ஊழியர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒராக்கிள் நிறுவனத்தின் கிளவுட் இன்பிராஸ்ட்ரக்சர் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒராக்கிள் நிறுவனம் பெருமளவிலான ஊழியர்களை பணியில் இருந்து நீக்க போவதாக கடந்த வாரம் தகவல் பரவிய நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அது செய்தியாக வெளிவந்துள்ளது. எத்தனை பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறித்த விரிவான தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் லேஆஃப்.காம் என்ற தளம் நவம்பர் 1ஆம் தேதி உயர் பதவியில் இருக்கும் 11 பேருக்கு பணி நீக்கம் குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக கூறுகிறது.

டெக் ஊழியர்கள் பணி நீக்கம்.. அதிக ஊதியம் பெரும் நபர்கள் தான் இலக்கு..!

ஒராக்கிள் நிறுவனத்தின் கிளவுட் இன்பிராஸ்ட்ரக்சர் பிரிவில் 15,000 பேர் பணி புரிகின்றனர் இவர்களில் 0.01% பேர் வேலையில் இருந்து அனுப்பப்பட்டனர் என மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்களுக்கு வேறு எந்த வாய்ப்பையும் வழங்காமல் உடனடியாக வேலையை விட்டு நின்று விடும்படி மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக அண்மையில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஃபிரஷராக பணிக்கு சேர்ந்தவர்கள் தொடங்கி மூத்த இயக்குனர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் வரை இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிளைன்ட் தளத்தில் ஒராக்கிள் நிறுவன ஊழியர்கள் சிலர் பதிவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒராக்கிள் நிறுவனம் அதிக ஊதியம் பெறும் நபர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக குறைந்த ஊதியத்தில் ஆட்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களே இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் சிலர் கூட வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு தான் ஒராக்கிள் நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பிராந்தியங்களில் இருக்கும் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க போவதாக அறிவித்திருந்தது.

அதிக ஊதியம் வாங்கக்கூடிய ஊழியர்கள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஆட்களை குறைத்து விட்டு இந்தியா போன்ற குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு வரும் பிராந்தியங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒராக்கிள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது என சிலர் கூறுகின்றனர்.

உலக அளவில் நான்காவது பெரிய கிளவுட் உள்கட்டமைப்பு நிறுவனமாக இருக்கிறது ஒராக்கிள். அண்மையில் தான் இந்த நிறுவனம் கூகுள் க்ளோவோடு மற்றும் அமேசான் வெப் சர்வீஸ் ஆகியவற்றோடு இணைந்து புதிய சேவைகளை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+