நாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரி, ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலையும், படிப்புக்கு ஏற்ற திறனும் மாணவர்களுக்குக் கிடைக்கிறதா என்றால்.. மிகப்பெரிய கேள்விக்குறி தான். மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முதல் கல்லூரி வரையில் அனைவருக்கும் கல்வி கிடைத்துள்ளது மிகப்பெரிய விஷயம், சொல்லப்போனால் அது தமிழ்நாட்டின் சாதனை என்று கூடச் சொல்லலாம். ஆனால் இன்று பட்டம் பெற்ற தமிழ்நாட்டு இன்ஜினியரிங் மாணவர்கள் செய்யும் வேலைகளைப் பார்க்கும் போதும் நாம் ஏதோ ஒரு இடத்தில் தோல்வி அடைந்துவிட்டோமோ என்று தான் தோன்றுகிறது.
இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் இன்றைய வேலைவாய்ப்பு சந்தை பற்றி ஒரு முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.
இன்ஜினியரிங் மாணவர்கள்
இந்தியா முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளி உலகத்தைச் சந்திக்கும் மாணவர்களுக்கு வெறும் 4 லட்சம் பேருக்குத் தான் சரியான துறையில் வேலை கிடைக்கிறது
மீதமுள்ள மாணவர்களின் நிலை என்ன..?
வெறும் 3 சதவீதம்
ஒவ்வொரு வருடமும் சராசரியாக 15 லட்சம் இன்ஜினியரிங் மாணவர்கள் பட்டம் பெற்று வரும் நிலையில் வெறும் 3 சதவீதம் பேர் தான் அதாவது 40,000 மாணவர்களுக்குத் தான் 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தில் பெரு நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.
இதுவும் இந்த வேலைவாய்ப்புகளைப் பெறுபவர்கள் பெரும்பாலும் நாட்டிலேயே பிரபலமான கல்லூரிகளில் படிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடி வேலைவாய்ப்புகள்
இதேபோல் 2.2 லட்சம் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஐடி துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் பெரும் பகுதி இத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் அதிகப்படியாக 3 முதல் 5 லட்சம் ரூபாய் சம்பளம் வேலை கிடைக்கிறது.
இதர துறைகள்
மேலும் 1.5 லட்சம் பட்டதாரி மாணவர்களுக்கு அவர்கள் படித்த துறையிலேயே வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெரைன், பேஷன் ஆகிய துறைகளில் படித்தவர்களுக்கு இத்துறை சார்ந்த பணிகள் கணிசமாகக் கிடைக்கிறது.
மற்ற மாணவர்கள்
கிட்டதட்ட 11 லட்ச மாணவர்களுக்கு அவரவர் படிப்பு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் கிடைக்கும் வேலைகளில் பணியாற்றுகின்றனர். அதிலும் பல லட்ச மாணவர்கள் குறைவான சம்பளத்தில் வேறு வழி இல்லாமல் வேலை செய்து வருகின்றனர்.
இன்னும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பே கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
என்ன காரணம்..?
இந்தப் பிரச்சனைக்கு 2 முக்கியக் காரணம் உள்ளது. முதலில் கல்லூரி, பட்டதாரி மாணவர்கள் இருக்கும் அளவில் இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை இதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
மற்றொன்று இன்றைய வேகமாக வளர்ந்து வரும் சந்தை தேவைக்குப் போதுமான திறன் இன்ஜினியர்கள் பட்டதாரி மாணவர்களிடம் இல்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் 2ஆம் 3ஆம் தர நகரங்களில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் தான். இந்தத் திறன் பற்றாக்குறை பெரிய அளவில் உள்ளது இதையும் நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications