இந்தியாவை வாட்டி வதைத்து வரும் 2வது கொரோனா அலையில் மத்திய அரசு லாக்டவுன் மற்றும் ஊரடங்கு விதிகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்குக் கொடுத்த காரணத்தால் வேலைவாய்ப்பை இழப்போரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்று கூறலாம்.
இந்த நிலையிலும் மே மாதம் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 1.5 கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர், இதன் மூலம் 2020 மார்ச் லாக்டவுன்-க்குப் பின் தற்போது வேலைவாய்ப்பின்மை அளவீடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கொரோனா தொற்று
மே மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில் பல மாநிலங்கள் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்தது வேலைவாய்ப்பு சந்தையைக் கடுமையாகப் பாதித்தது.
கடுமையான லாக்டவுன்
தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத நிலையைக் கடக்கும் போது எடுக்கப்பட்ட முடிவு தான் இந்தக் கடுமையான லாக்டவுன். இதனால் வகைப்படுத்தாத துறையில் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். குறிப்பாக 2020 லாக்டவுனுக்குப் பின் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் கடந்த 2 மாதங்களாக மாயமாகி வருகிறது.
வேலைவாய்ப்பின்மை அளவீடு
இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை மே மாதத்தில் 11.90 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாக நகரங்களில் வேலைவாய்ப்பின்மை 9.78 சதவீதத்தில் இருந்து 14.73 சதவீதமாக உயர்ந்துள்ளது கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை
கொரோனா தொற்றுக் கிராமங்கள், டவுன் பகுதிகளில் அதிகரித்துள்ளதால் மே மாதத்தில் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை 7.13 சதவீதத்தில் இருந்து 10.63 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மாநிலங்களின் லோக்கல் லாக்டவுன்
லோக்கல் லாக்டவுன் மூலம் பெரும்பாலான வர்த்தகங்கள் இயங்கி வந்தாலும் வேலைவாய்ப்பு சந்தை பாதித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை அளவீடு குறைந்த காலகட்டத்தில் ஒரு வருட உச்சத்தை அடைந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications