உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களை பாதிக்கும் கோவிட் -19 பெருந்தொற்று மத்தியில், நடப்பு ஆண்டில் தி கிரேட் ரெசிக்னேஷன் தொடர வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும் 86% ஊழியர்கள் அடுத்த ஆறு மாதங்களில் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று, ஆட்சேர்ப்பு நிறுவனமான மைக்கேல் பேஜ் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறைந்த சம்பளமே போதும்?
இந்தியாவில் உள்ள 61% பணியாளர்கள் குறைந்த சம்பளத்தை ஏற்க அல்லது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வைத் தவிர்த்து, சிறந்த வேலை, வாழ்க்கை சமநிலை, ஓட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த தயாராக இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
தி கிரேட் ரெசிக்னேஷன் தொடரலாம்
இது குறித்த தரவுகளின் படி, கடந்த 2 ஆண்டுகளில் உலகளாவிய தொற்று நோயால் தூண்டப்பட்ட நிலையில், தி கிரேட் ரெசிக்னேஷன் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இது இன்னும் தீவிரமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறைய பேர் வெளியேறலாம்
இந்த நிலையானது சந்தைகள், தொழில்கள், பட்டங்கள் மற்றும் முதுமை என பல பிரிவுகளாக தொடரலாம் என்று இந்த அறிக்கை கூறுகின்றது. மேலும் அடுத்த சில மாதங்களில் திறன் மிகுந்த ஊழியர்கள் பெரியளவில் வெளியேற வாய்ப்புள்ளதால், நிறுவனங்களை திறன் மிக்கவர்களை அதிகரிக்க தயாராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
இவ்வாறு வெளியேறும் ஊழியர்கள் சொல்லும் காரணங்களில், தொழில் முன்னேற்றம், சம்பளத்தில் மகிழ்ச்சியின்மை, துறையை மாற்ற ஆர்வம், நிறுவனம் செல்லும் பாதை என பல காரணிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ரொம்ப அதிகமாக இருக்கும்
இதில் கவலையளிக்கும் விஷயங்களில் ஒன்று, இந்த ஆய்வு நடத்தப்பட்ட 12 நாடுகளில், இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர். இங்கு அதிக ஊழியர்கள் தங்கள் வேலையில் ராஜினாமா செய்து விட்டு வெளியேற தயாராக உள்ளனர். இந்தியாவினை தொடர்ந்து இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் என பலவும் அடங்கும்.
எந்தெந்த துறையில் அதிகம்?
இதில் இன்னும் கவலை தரும் விஷயம் என்னவெனில் தனியார் ஊழியர்களை விட, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிக விருப்பத்துடன் உள்ளனர்.இதனை தொடர்ந்து எனர்ஜி, இயற்கை வளங்கள், உற்பத்தி துறை, போக்குவரத்து, சுற்றுலா, சில்லறை வணிகம், மற்ற தொழில்கள் உள்ளன.
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications