இந்தியாவின் மிகப்பெரிய ஹாஸ்பிடாலிட்டி செயின் நிறுவனமான OYO நாட்டின் பிற முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் போலவே செலவுகளைக் குறைக்க நிறுவனம் மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
OYO நிறுவனம் லாக்டவுன் காலத்திலேயே அதிகப்படியான வர்த்தகத்தை மூடியும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
OYO நிறுவனம்
OYO நிறுவனம் இந்தத் தடுமாற்றத்தில் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் ரெசிஷன் பாதிப்பும், பணிநீக்க அறிவிப்புகளும் மக்கள் சுற்றுலா செல்லும் எண்ணிக்கையும், ஹோட்டல் ரூம் புக்கிங் சேவையும் பெரிய அளவில் குறையும், இதை முன் கூட்டியே உணர்ந்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
600 ஊழியர்கள் பணிநீக்கம்
OYO நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்நிறுவனத்தில் மொத்த வர்த்தகத்திலும் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளதாகவும், இந்த நிலையில் மொத்த 3700 ஊழியர்கள் தற்போது பணியாற்றும் நிலையில் சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
டெக் ஊழியர்கள் பணிநீக்கம்
OYO நிறுவனம் தற்போது ப்ராடெக்ட் & இன்ஜினியரிங் அணிகளில் இருக்கும் ஊழியர்கள், OYO வெக்கேஷன் ஹோம் அணி ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதேபோல் partner relationship management மற்றும் business development அணிகளில் புதிதாக ஊழியர்களைச் சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முக்கியப் பிரிவுகள்
இதேபோல் தற்போது பணிநீக்கம் செய்யப்படும் டெக் ஊழியர்களும் OYOYO உருவாக்கி வரும் புதிய வர்த்தகம், முயற்சிகள் ஆகியவற்றில் தான் பணிநீக்கம் செய்ய உள்ளது, உதாரணமாக in-app gaming, social content curation மற்றும் patron facilitated content ஆகியவற்றில் இருந்து தான் அதிகளவிலான டெக் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க உள்ளது.
முன்னணி பொருளாதார நாடுகள்
அமெரிக்கா மற்றும் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் பணவீக்கம் மற்றும் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தால் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.
ரெசிஷன் அச்சம்
இதனால் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ரெசிஷன் அச்சம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் ரெசிஷன் பயம் இல்லை என்ற பல தரப்பினர் கூறி வரும் இதே வேளையில் இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமான பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
வேலைவாய்ப்பின்மை
இதன் எதிரொலியாக இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை நவம்பர் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 8 சதவீதம் உயர்ந்து 3 மாத உச்சத்தைத் தொட்டு உள்ளது. இப்போ இந்தியாவில் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளதா..?
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications