இந்தியா-வை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த மோடி அரசின் பணமதிப்பிழப்பு அறிவித்து 5 வருடம் முழுமையாக முடிந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மோடி அரசு கொடுத்த மிகப்பெரிய வாக்குறுதிகளின் நிலை என்ன..?
பணமில்லா பொருளாதார
மிஸ்டர் மோடி முதலில் இந்தியாவில் பணமில்லா பொருளாதார (Cashless economy) நாடாக மாற்றுவதாக அறிவித்தார், அதன் பின்பு இது அபத்தமான இலக்கு என்பதை உணர்ந்து குறைவான பணம் கொண்ட பொருளாதார (Less Cashless economy) நாடாக மாற்றுவதாக இலக்கை மாற்றினார்.
பணப்புழக்கம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கும் போது இந்தியாவில் மொத்தம் 18 லட்சம் கோடி ரூபாய் பணப் புழக்கத்தில் இருந்தது, தற்போது 28.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. (அதாவது மக்கள் கைகளில் பணமாக இருக்கும் தொகையின் அளவு.)
5 வருடம்
இந்த 5 வருடத்தில் அதிகப்படியான பணமதிப்பிழப்பு, அதிகப்படியான பணவீக்கம், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வருமானம் குறைந்ததிற்கு நன்றி எனவும். ஒரு வழியாக மோடி சொன்னது போல் Less Cashless economy ஆக இந்தியா உள்ளது என டிவிட்டரில் சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்.
கருப்புப் பணம்
மோடி அரசு சொன்னது போல் இந்தியாவில் இன்னமும் கருப்புப் பணம் ஒழிக்கவும் முடியவில்லை, அதேபோல் மக்கள் கைகளில் 5 வருடத்திற்கு முந்தைய அளவிட்டை விடவும் அதிகமாகவே பணம் புழங்கி வருகிறது இதனால் டிஜிட்டல் பொருளாதாரம் திட்டமும் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் பணமதிப்பிழப்பு குறித்து மக்களாகிய உங்களின் கருத்து மிகவும் முக்கியம் என்றால் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications