சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார ஏற்ற இறக்கத்தின் மத்தியில் கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே கூட்டத்தில் இது குறித்து கூறிய ப சிதம்பரம், இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர்.
நாட்டின் வளர்ச்சியினை பொறுத்த வரையில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
கடனை நிர்வகிக்கணும்
2009 - 11ம் கசப்பான அனுபவத்திற்கு பிறகு, நான் கற்றுக் கொண்ட பாடம் மற்றும் நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம் என்னவென்றால், நம் கடனை நாம் சரியாக நிர்வகிக்க வேண்டும். ஏனெனில் இது அரசாங்க செலவினம், பணவீக்கம் மற்றும் செலவழிக்கும் திறனை பாதிக்கிறது. பற்றாக்குறை மற்றும் கடன் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசாங்கம் கவனம் செலுத்தியதற்காக பெருமைப்படுவேன் என கூறியுள்ளார்.
நிதி பற்றாக்குறை
கடந்த மாதம் அதிக செலவுகள் மற்றும் குறைந்த வருவாய் காரணமாக நிதிப்பற்றாகுறை, ஜனவரி இறுதியில் 67.8% ஆக CGA தரவு சுட்டிக் காட்டுகின்றது.
ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், நிதி பற்றாக்குறை, செலவு மற்றும் வருவாய் வசூல் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி 11.9 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக CGA தெரிவித்துள்ளது.
எதிர்பார்ப்பு
அரசாங்கம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சந்தையில் இருந்து கடன் வாங்குகின்றது. 2021 - 22ம் ஆண்டில் ஒப்பிடக் கூடிய காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையானது 58.9% ஆக இருந்தது. இதே 2022 - 23ம் ஆண்டு முழுவதும் பற்றாக்குறை 17.55 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% ஆக இருக்கலாம் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
கடன் திரட்டல்
நிதிப் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த வருவாய்க்கும், மொத்த செலவினத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும். இப்படி நிலவும் நிதிப் பற்றாக்குறையில் பெரும் பகுதி கடனின் மூலமே சரி செய்யப்படுகின்றது. இவற்றில் சில சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி மற்றும் வெளி நாட்டுக் கடன், பத்திரங்கள் மூலமும் திரட்டப்படுகின்றது.
நிதிப் பற்றாக்குறை கணிப்பு
கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2023 - 24ம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறையானது ஜிடிபி-யில் 5.9% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது. ஆனால் இது தற்போது 6.4% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் 2025 - 26ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை என்பது 4.5% கீழாக கொண்டு வருவதில் அரசாங்கம் முயற்சி செய்தும் வருகின்றது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications