பிரதமர் மோடி அரசை பாராட்டிய ப சிதம்பரம்.. எதற்காக தெரியுமா?

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார ஏற்ற இறக்கத்தின் மத்தியில் கடன் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே கூட்டத்தில் இது குறித்து கூறிய ப சிதம்பரம், இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர்.

நாட்டின் வளர்ச்சியினை பொறுத்த வரையில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

கடனை நிர்வகிக்கணும்

கடனை நிர்வகிக்கணும்

2009 - 11ம் கசப்பான அனுபவத்திற்கு பிறகு, நான் கற்றுக் கொண்ட பாடம் மற்றும் நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடம் என்னவென்றால், நம் கடனை நாம் சரியாக நிர்வகிக்க வேண்டும். ஏனெனில் இது அரசாங்க செலவினம், பணவீக்கம் மற்றும் செலவழிக்கும் திறனை பாதிக்கிறது. பற்றாக்குறை மற்றும் கடன் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசாங்கம் கவனம் செலுத்தியதற்காக பெருமைப்படுவேன் என கூறியுள்ளார்.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

கடந்த மாதம் அதிக செலவுகள் மற்றும் குறைந்த வருவாய் காரணமாக நிதிப்பற்றாகுறை, ஜனவரி இறுதியில் 67.8% ஆக CGA தரவு சுட்டிக் காட்டுகின்றது.

ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், நிதி பற்றாக்குறை, செலவு மற்றும் வருவாய் வசூல் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி 11.9 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக CGA தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அரசாங்கம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சந்தையில் இருந்து கடன் வாங்குகின்றது. 2021 - 22ம் ஆண்டில் ஒப்பிடக் கூடிய காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையானது 58.9% ஆக இருந்தது. இதே 2022 - 23ம் ஆண்டு முழுவதும் பற்றாக்குறை 17.55 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% ஆக இருக்கலாம் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

கடன் திரட்டல்

கடன் திரட்டல்


நிதிப் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த வருவாய்க்கும், மொத்த செலவினத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும். இப்படி நிலவும் நிதிப் பற்றாக்குறையில் பெரும் பகுதி கடனின் மூலமே சரி செய்யப்படுகின்றது. இவற்றில் சில சேமிப்பு, வருங்கால வைப்பு நிதி மற்றும் வெளி நாட்டுக் கடன், பத்திரங்கள் மூலமும் திரட்டப்படுகின்றது.

நிதிப் பற்றாக்குறை கணிப்பு

நிதிப் பற்றாக்குறை கணிப்பு

கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2023 - 24ம் ஆண்டுக்கான நிதி பற்றாக்குறையானது ஜிடிபி-யில் 5.9% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது. ஆனால் இது தற்போது 6.4% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் 2025 - 26ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை என்பது 4.5% கீழாக கொண்டு வருவதில் அரசாங்கம் முயற்சி செய்தும் வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+