பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட நிலையில், இன்று பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் உடன் பட்ஜெட் அறிக்கை தாக்கலுக்காகக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் பட்ஜெட் வெளியிடும் நாளான இன்று, தனது டிவிட்டரில் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம் தனது டிவிட்டரில், பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இன்று காலை சில செய்தித் தாள்களை பார்த்தால், இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடும்.
பொருளாதாரம்
மேலும், பலவீனமான எதிர்க்கட்சி இருந்தாலும், அதற்குப் பொருளாதாரம் பற்றிய பார்வை இல்லை என்ற வகையில் சித்தரிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சிறந்த நேரங்கள், மோசமான நேரங்கள்
அடுத்த டிவீட்டில் ப.சிதம்பரம், சார்லஸ் டிக்கென்ஸ் சொன்னது போல் சிறந்த நேரங்கள், மோசமான நேரங்கள் ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இவருடைய டிவீட்-க்கு பலர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும், வழக்கம் போல் கடுமையான எதிர்ப்பும் உள்ளது.
2009 சர்வதேச நிதிநெருக்கடி
ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இதேபோல் சிதம்பரம் அவர்களின் தலைமையில் 2009ல் சர்வதேச நிதிநெருக்கடியில் இந்தியா பெரிய அளவில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தது.
பொருளாதார ஆய்வறிக்கை
மத்திய அரசு நேற்று வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8-8.5% வரையில் உயரும் என்று கணித்துள்ளது. இதேபோல் 2021-22ஆம் நிதியாண்டில் ஜிடிபி 9.2% வரையில் உயரும் எனத் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 2021-22ஆம் நிதியாண்டில் விவசாயத் துறை 3.9%, தொழிற்துறை 11.8%, சேவைத் துறை 8.2% வரை வளர்ச்சி அடையும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications