பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வேளையில், ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து பெற வேண்டிய 6.7 பில்லியன் டாலர் கடன் திட்டத்தை உயிர்ப்புடன் வைக்க முக்கியமான இலக்கை அடைய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து நிதியுதவி பெற முக்கியமான கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
பாகிஸ்தான் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து 6.7 பில்லியன் டாலர் அளவிலான கடன் உதவியை பெற, ஐஎம்எப் எக்ஸ்டர்னல் பைனான்சிங் கேப் மற்றும் எக்ஸ்சேடஞ்ச் ரேட் பாலிசி ஆகியவற்றில் முக்கியமான இலக்கை அடைய உத்தரவிட்டு உள்ளது. இதனாலேயே 6 மாதமாக ஐஎம்எப் திட்டம் தடைபெற்று நிற்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு தனது 6 பில்லியன் டாலர் அளவிலான எக்ஸ்டர்னல் பண்டிங் கேப்-ஐ சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே 6 பில்லியன் டாலர் இலக்கில் 4 பில்லியன் டாலர் தொகையை திரட்டியுள்ள நிலையில், மீதமுள்ள 2 பில்லியன் டாலர் தொகையை திரட்டு முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சகம் வருகிற வெள்ளிக்கிழமை தனது வருடாந்திர பட்ஜெட் அறிக்கையை வெளியிட உள்ளது, இதற்குள் 2 பில்லியன் டாலர் நிதியை திரட்டி ஐஎம்எப் கடன் திட்டத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எதற்காக இந்த அவசரம்..? முக்கியமான காரணம் உள்ளது.
பாகிஸ்தான் - ஐஎம்எப் மத்தியிலான 6.7 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி திட்டம் ஜூன் மாத இறுதியில் முடிவாகிறது. இந்த காலக்கட்டத்திற்கும் IMF கொடுத்த இலக்கை முடிக்கவில்லை எட்டாமல் தோற்றுவிட்டால் மீண்டும் முதலில் இருந்து பாகிஸ்தான் நிதிநிலையை ஆய்வு செய்து புதிய கணக்கு, புதிய இலக்கு, புதிய தொகை நிர்ணயம் செய்யப்படும்.
IMF அமைப்பின் 6.7 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவிக்கு முக்கிய தடையாக இருப்பதே எக்ஸ்டர்னல் பைனான்சிங் கேப் மற்றும் எக்ஸ்சேடஞ்ச் ரேட் பாலிசி ஆகிய இரண்டும் தான். இதனால் 2 பில்லியன் டாலர் நிதியை எப்படியாவது திரட்ட வேண்டும் என்று பல்வேறு சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் அரசு இறங்கியுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டிற்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரீகம் ஆகியவை சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை நிதியுதவியாக அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோல் சீனா மற்றும் சீன அரசு வங்கிகள் பாகிஸ்தானுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் கடனை புதிதாக கொடுத்துள்ளது.
இதை வைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான் அரசு ஐஎம்எப் கடன் திட்டத்தை நம்பி இருக்கிறது. இதற்கு மத்தியில் பாகிஸ்தான் நாட்டின் அதிகப்படியான உள்நாட்டு அரசியல் பிரச்சனைகள், இம்ரான் கான் கைது போன்ற பிரச்சனைகளும் இருந்தது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications