ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்திய இசையை ஒளிபரப்புவதற்கு உடனடி தடை உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) இந்த முடிவை அறிவித்த நிலையில், இது தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டா தாரர் பாராட்டியுள்ளார். இந்தியாவில் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இந்திய இசையின் ஆதிக்கம் மிகவும் அதிகம், கசல் பாடல்கள், குறிப்பாக பாலிவுட் பாடல்கள், பாகிஸ்தான் வானொலிகளில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்திய பாடல்களை பாகிஸ்தானில் கோடிக்கணக்கான மக்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும் வேளையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.
பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் (PBA) பொதுச் செயலாளர் ஷகீல் மசூத், நாடு முழுவதும் உள்ள எஃப்.எம் நிலையங்களில் இந்திய இசையை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தார். இந்த முடிவை பிடிஐ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது. பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டா தாரர் இந்த நடவடிக்கையை வரவேற்றார்.
பாகிஸ்தானின் இந்திய இசை தடைக்கு முன்பு, இந்திய அரசு காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியாவில் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டன. இதில் டான் நியூஸ், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், ஜியோ நியூஸ் போன்ற முக்கிய ஊடக நிறுவனங்களின் சேனல்கள் அடங்கும். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவே பாகிஸ்தான் இந்திய இசைக்கு தடை விதித்துள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் பதிலடி கொடுத்து வருகிறது, இந்தியாவில் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை முடக்கியதற்கு இந்திய இசைக்கு தடை விதித்துள்ளது. இது ஒருப்பக்கம் இருந்தாலும், இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்ற பீதியிலேயே பாகிஸ்தான் உள்ளது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications