பாகிஸ்தான் பொருளாதாரம் ஊசலாடிக்கொண்டு இருக்கும் வேளையில் சீனாவிடம் இருந்து 40 ஜே-35 ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாகிஸ்தான் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து கடன் தொகையைப் பெறப் பல்டி அடித்து வரும் வேளையில், இந்த போர் விமான வாங்கும் திட்டம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாகச் சீனாவிடம் இருந்து ஏற்கனவே அதிகப்படியான கடனை வாங்கிக்கொண்டு அதன் வலையில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வாங்குகிறது. சீனா முதல் முறையாக ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வெளிநாட்டுக்கு விற்கிறது.

இந்த போர் விமானங்கள் வாங்குவது குறித்து அதுவரையில் 2 நாடுகள் எவ்விதமான அதிகாரப்பூர்வம அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஊடகங்களிலும், ஹாங்காங்கை தளமாகக் கொண்ட சவுத் சைனா மார்னிங் போஸ்டில் இதுதொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியில் பாகிஸ்தான் விமானப்படை (பிஏஎஃப்) இந்த விமானங்களை வாங்குவதை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், இந்த 40 ஜே-35 விமானங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் டெலிவரி செய்யப்படும் என்ற வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் விமானப்படையில் இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் பழுதாகி காலாவதியாகும் நிலையில், இந்த வெற்றிடத்தைச் சீனாவின் ஜே-35 விமானங்கள் நிரப்புகிறது.
பாகிஸ்தான் வாங்க திட்டமிட்டும் இந்த 40 சீனப் போர் விமானங்கள் அந்நாட்டின் வான்வழி பாதுகாப்பை மேம்படுத்தும் என்பதால் அண்டை நாடுகளாக இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்றவற்றைப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் கட்டாயம் உருவாகியுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை லார்சன் & டூப்ரோ (எல்&டி) நிறுவனத்துடன் 7,628 கோடி ரூபாய் மதிப்பிலான 100 தானியங்கி துப்பாக்கிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது.
லார்சன் & டூப்ரோ நிறுவனம் தயாரிக்கப்பட்ட 100 K9 வஜ்ரா துப்பாக்கிகள் அதாவது ஆர்டில்லரி துப்பாக்கிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக லடாக் போன்ற உயரமான பகுதிகளில் இந்த துப்பாக்கிகள் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து தற்போது அடுத்தகட்ட ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications