இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பது அனைவருக்கும் தெரியும், இதேவேளையில் எப்படியாவது ஐஎம்எப் உடன் ஒப்பந்தம் போட்டப்படி தனது நிபந்தனைகளை பூர்த்தி செய்து 6.7 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் மோசமான நிதிநெருக்கடி மற்றும் மந்தமான வர்த்தகம் நிலையை எதிர்கொண்டு இருக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கு இந்த இக்கட்டான நிலையில் பெரும் நிவாரணமாக, சீனாவிடம் இருந்து சுமார் 1 பில்லியன் டாலர்கள் அளவிலான தொகை பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் பெற்றுள்ளது.

இதுக்குறித்து பாகிஸ்தான் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சீனாவிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறப்பட்டுள்ளன என்பதை பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவே அறிக்கை வெளியிட்டு உள்ளதாகர மத்திய வங்கி வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு தொடர்ந்து குறைந்து வரும் வேளையில் அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தார், சமீபத்தில் சீன நாட்டிற்கான கடனை அடைக்க செலுத்தப்பட்ட 1.30 பில்லியன் டாலர் தொகையை சீனா இன்று அல்லது திங்கட்கிழமை மறுநிதியளிப்பு செய்யும் என தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் நிதியமைச்சர் சீனா-வுடன் ஏற்கனவே பேசப்பட்டு வந்த 2 பில்லியன் டாலர் தொகைக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் அரசு தனது 6 பில்லியன் டாலர் அளவிலான எக்ஸ்டர்னல் பண்டிங் கேப்-ஐ சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே 6 பில்லியன் டாலர் இலக்கில் 4 பில்லியன் டாலர் தொகையை திரட்டியுள்ள நிலையில்..
தற்போது மீதமுள்ள 2 பில்லியன் டாலர் தொகையை திரட்டு முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த 2 பில்லியன் டாலர் தொகையை மீண்டும் சீனாவிடம் பெற முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், அரசியல் பிரச்சனைக்கு மத்தியிலும் மோசமான நிலையை அந்நாட்டு மக்களும், வர்த்தக சந்தையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த மோசமான காலக்கட்டத்தில் பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் அந்நாட்டின் முதலீட்டு சந்தை வேலைவாய்ப்பு சந்தை ஆகியவை அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications