6 அமைச்சகங்களை மூடிய பாகிஸ்தான் அரசு.. 1.5 லட்சம் அரசு பணியிடங்கள் நீக்கம்.. எல்லாம் பணத்துக்காக..!!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்தும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட காரணத்தால் பெரும் பகுதி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டு கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த மோசமான நிலையில் இருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்பதற்காகப் பல மாத போராட்டத்திற்குப் பின்பு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 7 பில்லியன் டாலர் தொகையை கடனாக பெற ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த கடனும் பல நிபந்தனைகளோடு கொடுக்கப்பட்ட காரணத்தால் பாகிஸ்தான் அரசு மிகவும் முக்கியமான முடிவை அறிவித்துள்ளது.

6 அமைச்சகங்களை மூடிய பாகிஸ்தான் அரசு.. 1.5 லட்சம் அரசு பணியிடங்கள் நீக்கம்.. எல்லாம் பணத்துக்காக..!!

பாகிஸ்தான் அரசு, தனது நிர்வாக செலவுகளைக் குறைக்கும் முயற்சியில், 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்காக IMF உடன் ஒப்புக் கொண்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சுமார் 150,000 அரசுப் பணியிடங்களை நடைமுறையில் இருந்து நீக்கவும், ஆறு அமைச்சகங்களை மொத்தமாக மூடவும், இரு அமைச்சகங்களை ஒன்றாக இணைக்கவும் உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இது பாகிஸ்தான் மக்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் பேரதிர்ச்சியாக உள்ளது.

சர்வதேச நாணய நிதியம் செப்டம்பர் 26 அன்று பாகிஸ்தான் நாட்டிற்கான 7 பில்லியன் டாலர் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த கடனில் முதல் தவணையாக 1 பில்லியன் டாலர் நிதியுடன் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்த கடனை சிறப்பாக பயன்படுத்த IMF பாகிஸ்தான் அரசின் செலவுகளைக் குறைப்பதற்கும், வரி-ஜிடிபி விகிதத்தை அதிகரிப்பதற்கும், விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகள் மீது வரி விதிக்கவும், அரசின் மானியங்களை குறைக்கவும், சில அரசு நிதி பொறுப்புகளை மாநில அரசுக்கு மாற்றுவதற்கும் நிபந்தனை விதித்தது. இதை நடைமுறைப்படுத்துவதாக பாகிஸ்தான் அரசு உறுதியளித்த பிறகு தான் IMF 1 பில்லியன் டாலர் தொகையை முதல் தவணையாக கொடுத்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பிய அந்நாட்டு நிதி அமைச்சர் முஹம்மது அவுரங்கசெப் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், IMF உடன் இறுதி பேச்சுவார்த்தை முடிந்து கடனுக்கான ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. இது பாகிஸ்தானுக்கான கடைசி கடன் திட்டமாக இருக்கும், இனி பாகிஸ்தான் கடன் வாங்காது என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் முஹம்மது அவுரங்கசெப் அமைச்சகங்களை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தின் ஒரு படியாக, ஆறு அமைச்சகங்களை மூடும் முடிவு செய்யப்பட்டு உள்ளது, அதே நேரத்தில் இரண்டு அமைச்சகங்கள் இணைக்கப்படும் என்று கூறினார். இதோடு பல அமைச்சகங்களில் சுமார் 150,000 அரசு பணிகள் நீக்கப்படும் என்றும் கூறி மக்களுக்கு உறுதி செய்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+